தமிழ்நாடு
சென்னை மெட்ரோ ரயில்- மாநகர பேருந்து இரண்டுக்கும் ஒரே டிக்கெட்.. எப்போது முதல்?
சென்னை மெட்ரோ ரயில் மற்றும் மாநகர பேருந்து இரண்டுக்கும் ஒரே டிக்கெட்டில் பயணிக்கும் திட்டத்தை டிசம்பர் மாதம் முதல் செயல்படுத்தத் திட்டமிட்டு வருகிறார்கள்.
சென்னையில் நீண்ட காலமாகவே ஒரே டிக்கெட்டில் பேருந்து, மெட்ரோ ரயில், புறநகர் ரயில் போன்றவற்றில் பயணிக்க ஒரே டிக்கெட் என்ற சேவை அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் முதற்கட்டமாக 2023 டிசம்பர் மாதம் முதல் சென்னை மெட்ரோ ரயில் மற்றும் மாநகர பேருந்தில் பயணிக்க ஒரே டிக்கெட் சேவை அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.
இது ஸ்மார்ட் கார்டு அல்லது QR குறியீடு சேவை மூலமாக இருக்கும் என கூறப்படுகிறது.
சென்னை புறநகர் ரயிலில் இந்த சேவை இந்தியன் ரயில்வேவின் அனுமதிக்குப் பிறகு 2024-ம் ஆண்டு முதல் பயன்பாட்டுக்கு வரும் என கூறப்படுகிறது.