தமிழ்நாடு
15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ராணுவ வீரர் அதிரடி கைது!
குன்னூரை சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறி போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் இந்திய ராணுவத்தில் வீரராக பணியாற்றி வருகிறார் குன்னூர் கிளப் குடியுருப்பு பகுதியை சேர்ந்த கிறிஸ்டோபர் என்பவர். 27 வயதான இவர் கடந்த வாரம் விடுமுறைக்கு வந்துள்ளார். இதனையடுத்து அவர் கடந்த 15-ஆம் தேதி குன்னூர் வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை எங்கேயோ அழைத்துச்சென்றிருக்கிறார்.
இதை தொடர்ந்து அவர்கள் காணாமல் போன சிறுமியை செல்போன் மூலமாக தொடர்பு கொண்டபோது அவர்கள் வேளாங்கண்ணியில் உள்ளது தெரியவந்தது. அவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில் 15 சிறுமியை ஆசை வார்த்தை கூறி வேளாங்கண்ணி அழைத்துச் சென்று கிறிஸ்டோபர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதனையடுத்து குன்னூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ராணுவ வீரர் கிறிஸ்டோபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.