Connect with us

இந்தியா

அரசிடம் இருந்தபோது இதைவிட நன்றாக இருந்தது: ஏர் இந்தியா குறித்து பிரதமரின் ஆலோசனை குழு தலைவர்..!

Published

on

ஏர் இந்தியா மத்திய அரசிடம் இருந்தபோது கடும் நஷ்டத்தை சந்தித்து வந்த நிலையில் தற்போது டாடா நிறுவனத்திடம் இருக்கும் நிலையில் அந்த நிறுவனம் படிப்படியாக லாபத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஏர் இந்தியா நிறுவனம் தனியாரிடம் சென்ற பிறகுதான் மிக மோசமாக செயல்படுகிறது என பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு தலைவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லியில் இருந்து மும்பைக்கு செல்வதற்காக ஏர் இந்தியா விமானத்தில் டெட்ராய் முன்பதிவு செய்து இருந்தார். அவரது விமானம் மாலை 4:35 மணிக்கு புறப்படுவதாக இருந்தது. ஆனால் இரவு 7 மணி ஆகியும் புறப்படவில்லை என்றும் இன்னும் சரியாக எப்போது புறப்படும் என்ற தகவல் எதுவும் இல்லை என்றும் அவர் தனது ட்விட்டரில் தெரிவித்து இருந்தார்.

தனியார் மயமாக்கலுக்கு முன் விமான நிறுவனம் சிறப்பாக இருந்தது என்றும் தொடர்ச்சியாக விமானம் கிளம்பும் நேரம் மாற்றப்பட்டு வருகிறது என்றும் இதற்கு சரியான விளக்கமும் அளிக்கவில்லை என்றும் அவர் ட்விட்டரில் பதிவு செய்திருந்தார். காலதாமதம் ஆனதற்கு யாரும் பொறுப்பாக இருப்பதாக தெரியவில்லை என்றும் பதினைந்து நிமிடங்களுக்கு ஒரு முறை விமானம் கிளம்பும் நேரத்தை மாற்றி வருகிறார்கள் என்றும் யாருக்கும் பொறுப்பில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

டெல்லி – மும்பை விமானம் சொர்க்கம் அல்ல என்றும் நரகமாக இருந்தது என்றும் நான்கு மணி நேரம் ஆக நாங்கள் காத்திருக்கின்றோம் என்றும் பயணிகள் அனைவரும் மிக கோபமாக இருக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இது குறித்து ஏர் இந்தியா விளக்கம் அளித்தபோது விமானம் 8 மணிக்கு கண்டிப்பாக கிளம்பும் என்றும் தயவுசெய்து நம்பிக்கையுடன் இருங்கள் என்றும் அனைத்து பயணங்களுக்கும் உதவ எங்கள் நிறுவனம் முயற்சி செய்கிறது என்றும் தெரிவித்திருந்தது. ஆனால் எந்த பயணிக்கும் அவர்கள் உதவவில்லை என்றும் கோபமடைந்த பயணிகளின் வீடியோவை நான் ட்விட் செய்யட்டுமா என்றும் நான்கு மணி நேரம் காத்திருக்கும் பயணிகளுக்கு டீ காப்பியாவது கொடுக்க பரிந்துரை செய்கிறேன் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் டாடா குழுமத்தால் ஏர் இந்தியா கைப்பற்றப்பட்ட நிலையில் தற்போது 470 புதிய விமானங்களுக்கு ஆடர் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்12 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்12 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு12 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா12 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு12 மணி நேரங்கள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்12 மணி நேரங்கள் ago

H-1B விசா: இந்த ஆண்டும் இரண்டாம் சுற்று குலுக்கல்

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொழியும்!

ஆரோக்கியம்13 மணி நேரங்கள் ago

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 9 காரணங்கள்!

வணிகம்5 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

வணிகம்5 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்4 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

ஓய்வு காலத்தில் நிலையான மாத வருமானம் வழங்கும் 5 சிறந்த திட்டங்கள்!

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்