Connect with us

இந்தியா

திறமையானவர் என போனஸ் பெற்றவர் பணிநீக்கம்.. கூகுள் இந்தியா ஊழியரின் சோகக்கதை..!

Published

on

கூகுள் இந்தியா சமீபத்தில் 453 ஊழியர்களை வேலை நீக்கம் செய்த தகவலை பார்த்தோம். இந்த தகவலின் படி வேலைநீக்கம் செய்யப்பட்ட ஒருவர் தான் திறமையாக பணிபுரிந்ததற்காக போனஸ் பெற்றதாகவும் ஆனால் தன்னை நிறுவனம் ஏன் நீக்கிவிட்டது என்பதை இன்று வரை எனக்கு புரியவில்லை என்றும் சோகத்துடன் தனது லிங்க்ட்-இன் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

கூகுள் இந்தியா நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 453 ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்தது. பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு இரவோடு இரவாக மெயில் மூலம் தகவல் அனுப்பப்பட்டதாகவும் கூறப்பட்டது. குருகிராம் கூகுள் இந்தியா அலுவலகத்தில் பணிபுரிந்த 453 ஊழியர்கள் திடீரென ஒரே நாளில் வேலையை விட்டு நீக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இந்நிறுவனத்தில் பணிபுரிந்து வேலை இழந்த ஒருவர் தனது லிங்க்ட்-இன் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவு செய்துள்ளார். நான் நினைக்காத செய்திகள் எனக்கு அன்றைய தினம் கிடைத்தன. கூகுள் நிறுவனத்தின் மேம்பாட்டு மேலாளராக பணி செய்து கொண்டிருந்த நான் இரவு 8:34 மணிக்கு வந்த மெயிலை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். அன்றைய தினத்திலிருந்து எனது வாழ்க்கை தலைகீழாக மாறியது.

கூகுள் நிறுவன ஊழியராக நான் நிறுவனத்திற்கு எனது சிறப்பான பணியை வழங்கினேன். மேலும் கடின உழைப்புக்கு எனக்கு ஸ்பாட் போனஸ் கிடைத்தது என்பதை நினைத்து நான் பெருமைப்பட்டேன். ஆனால் இவ்வாறு திடீரென பணி நீக்கம் செய்யப்படுவேன் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. கூகுள் இந்தியாவின் வளர்ச்சிக்காக நான் 24 மணி நேரமும் உழைத்தேன், எனது பங்களிப்புகள் சிறப்பாக இருந்த போதிலும் திறமையானவர்களை நிறுவனம் கைவிடுவது மனவேதனையை அளிக்கிறது.

google layoff

ஆனால் அவர்கள் சொல்வது போல் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு பின்னணி இருக்கும். இந்த மாற்றம் என்னை மேலும் வளர்ச்சி அடைய செய்யும் என்றும் சுய கண்டுபிடிப்புகளுக்கான புதிய பாதைக்கு இட்டுச் செல்லும் என்றும் நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன். புதிய வாய்ப்புகளுக்காக நான் என் நண்பர்களிடம் உறவினர்களிடம் கேட்டுக் கொண்டிருக்கிறேன், எனக்கு மீண்டும் ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்கும் என்று நான் நினைக்கிறேன். என்று கூறியுள்ளார் அவரது இந்த பதிவை பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
seithichurul
வணிகம்1 மணி நேரம் ago

ஜியோவின் புதிய OTT திட்டங்கள்: அதிரடி சலுகைகள்!

தமிழ்நாடு2 மணி நேரங்கள் ago

ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியால் போக்குவரத்து மாற்றம்!

வேலைவாய்ப்பு2 மணி நேரங்கள் ago

அரசு வேலைக்கு தட்டச்சு பயிற்சி அவசியம்: தேர்வர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

சனி பகவானின் ஆசிர்வாதம்: கிச்சடி உணவின் ஆன்மீக முக்கியத்துவம்!

இந்தியா3 மணி நேரங்கள் ago

ஐபோன் விலையில் அதிரடி குறைப்பு!

வேலைவாய்ப்பு4 மணி நேரங்கள் ago

ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

செய்திகள்4 மணி நேரங்கள் ago

BSNL-க்கு மாறி வருகிறார்கள்: ஜியோ, ஏர்டெல் கவலை!

சினிமா4 மணி நேரங்கள் ago

ராயன் படத்தின் முதல் நாள் வசூல் கலக்கு! ரூ.12 கோடிக்கும் மேல்!

வேலைவாய்ப்பு4 மணி நேரங்கள் ago

ரூ.35,000/- சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

வேப்பிலை முதல் துளசி வரை: இயற்கையின் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டு மருந்துகள்!

பல்சுவை5 நாட்கள் ago

“கேரளா ஸ்டைல் கடலை கறி: சுவையான மற்றும் சத்தான குழம்பு”!

வணிகம்4 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் குறையும் தங்கம் விலை (23/07/2024)!

வணிகம்3 நாட்கள் ago

திடீர் எனச் சரிந்து வரும் தங்கம் விலை (24/07/2024)!

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலையில் மாற்றமில்லை (21/07/2024)!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

3,789 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்கள்: தமிழ்நாட்டில் அபார வாய்ப்பு!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024-25-இல் ஸ்டார்ட்அப்-களுக்கு அடித்த ஜாக்பாட்!

வணிகம்4 நாட்கள் ago

2024 பட்ஜெட்: விலை குறையும், அதிகரிக்கும் பொருட்கள்

வணிகம்6 நாட்கள் ago

தினமும் 14 மணிநேர வேலைக்கு அனுமதி கேட்கும் ஐடி நிறுவனங்கள்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஊழியர்கள்!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024: உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? புதிய திட்டம் – என்.பி.எஸ். வாத்ஸல்யா

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!