Connect with us

இந்தியா

60 மணி நேரம் நடந்த பிபிசி அலுவலக சோதனை முடிந்தது.. என்னென்ன ஆவணங்கள் சிக்கியது?

Published

on

பிபிசி டெல்லி மற்றும் மும்பை அலுவலகத்தில் கடந்த 60 மணி நேரமாக நடந்த வருமானவரித்துறை அதிகாரிகளின் சோதனை முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 14ஆம் தேதி திடீரென வருமானவரித்துறை அலுவலர்கள் டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகத்தில் சோதனை செய்து வந்தனர். சுமார் 60 முதல் 70 ஊழியர்கள் இந்த சோதனைகளில் ஈடுபட்டதாகவும் இரவு பகலாக இந்த சோதனை நடைபெற்றதாகவும் கூறப்பட்டது.

சோதனை நடைபெறும் நேரத்தில் பிபிசி அலுவலகத்தில் இருந்து ஊழியர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை என்றும் அதேபோல் உள்ளே புதிய ஊழியர்கள் வர அனுமதிக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் வருமானவரித்துறை அலுவலர்களுக்கு தகுந்த ஒத்துழைப்பு வழங்குமாறு பிபிசி தனது ஊழியர்களுக்கு அறிவுறுத்தி இருந்தது.

பிபிசி ஊழியர்களின் செல்போன் மற்றும் லேப்டாப்கள் ஸ்கேன் செய்யப்பட்டதாகவும் அதில் பினாமி முறையில் பணம் அனுப்பப்பட்டதா? கருப்பு பணம் பயன்படுத்தப்பட்டதா? என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்ட தாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 60 மணி நேரமாக நடந்த சோதனை முடிவுக்கு வந்ததை அடுத்து நேற்று வருமானத்துறை அதிகாரிகள் பிபிசி அலுவலகத்தில் இருந்து வெளியேறியதாகவும் அவர்கள் தங்களுடன் சில ஆவணங்களை எடுத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது. பிபிசி அலுவலகத்தில் சோதனையின் போது சிக்கிய ஆவணங்கள் என்னென்ன? என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வருமானவரித்துறை அலுவலர்கள் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் பிபிசி இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் வருமானவரித்துறை அதிகாரிகள் டெல்லி மற்றும் மும்பையில் உள்ள எங்கள் அலுவலகங்களை விட்டு வெளியேறி உள்ளனர். நாங்கள் அதிகாரிகளுக்கு தொடர்ந்து முழு அளவில் ஒத்துழைப்பை அளிப்போம். விரைவில் எங்களுடைய பிரச்சனைகள் தீர்க்கப்படும் என்று நம்புகிறோம். நாங்கள் எங்கள் ஊழியர்களை தொடர்ந்து ஆதரித்து வருகிறோம். ஊழியர்களில் சிலர் நீண்ட கேள்விகளை எதிர்கொண்டுள்ளனர். ஒரே இடத்தில் மூன்று நாட்களாக தங்க வேண்டி இருந்தது, அவர்களின் நலனே எங்களுக்கு முன்னுரிமை. இப்போது எங்கள் அலுவலகம் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது.

மேலும் இந்தியாவிலும் அதற்கு அப்பாலும் எங்கள் பார்வையாளர்களுக்கு சேவை செய்வதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளது.

author avatar
seithichurul
வணிகம்1 நாள் ago

இன்று புதிய உச்சத்தை தொட்ட தங்கம், வெள்ளி விலை!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்1 நாள் ago

இன்றைய ராசிபலன் (19/10/2024)

செய்திகள்2 நாட்கள் ago

ஆளுநர் ரவி தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘திராவிடம்’ நீக்கம் – முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்!

வேலைவாய்ப்பு2 நாட்கள் ago

ஒரே நாளில் 45,000 வேலைவாய்ப்புகள்! – தமிழக அரசின் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்கள்!

ஜோதிடம்2 நாட்கள் ago

குரு வக்ர பெயர்ச்சி: நற்பலன் பெறும் ராசிகள் யாவர்?

செய்திகள்2 நாட்கள் ago

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு!

செய்திகள்2 நாட்கள் ago

இந்தி மொழி திணிப்பு இல்லை: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கருத்து!

வணிகம்2 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு(18-10-2024)!

ஜோதிடம்2 நாட்கள் ago

500 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம் – இந்த 3 ராசிக்காரர்களுக்கு செல்வம் குவியவிருக்கிறது!

ஆன்மீகம்2 நாட்கள் ago

தமிழ்: இவருக்கு பொன்னான மனசுப்பா! ராகு கருணை மழையாய் கொட்டுகிறார்.. அனுபவிக்கும் அதிர்ஷ்ட ராசிகள்!

வணிகம்4 நாட்கள் ago

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ரூ.360 வரை உயர்வு!

வணிகம்4 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(16-10-2024)

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

TNPSC குரூப் 5A வேலைவாய்ப்பு அறிவிப்பு – விண்ணப்பிக்கலாம்! முழு விவரங்கள் உள்ளே!

வணிகம்3 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் உயரும் தங்கம் விலை!(17-10-2024)

தமிழ்நாடு4 நாட்கள் ago

சென்னை மழைப் பேரிடரில் பாதிக்கப்பட்டோருக்கு முதல்வர் ஸ்டாலின் இலவச உணவு அறிவிப்பு!

சினிமா3 நாட்கள் ago

இயக்குனராக அவதாரம் எடுக்கும் யுவன் சங்கர் ராஜா!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – அக்டோபர் 15, 2024

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

ரூ.42,500/- சம்பளத்தில் BHEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (16/10/2024)

ஆன்மீகம்3 நாட்கள் ago

குரு சாட்டையை எடுத்துவிட்டார்: அக்டோபர் முதல் தங்கத்தில் அடி விழும் ராசிகள்! மகிழ்ச்சியின் திருப்பம்!