Connect with us

உலகம்

வேலைநீக்க அறிவிப்பை வெளியிட்ட இன்னொரு அமெரிக்க நிறுவனம்.. இந்தியர்களுக்கு பெரும் பாதிப்பு..!

Published

on

தினந்தோறும் ராசிபலன் பார்ப்பது போல் தினந்தோறும் வேலைநீக்க நடவடிக்கையை பார்க்கும் நிலை வந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கூகுள் மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பல நிறுவனங்கள் வேலை நீக்க அறிவிப்பை வெளியிட்ட நிலையில் தற்போது சின்ன சின்ன நிறுவனங்களும் வேலை நீக்க அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன.

தினமும் ஒன்று அல்லது இரண்டு நிறுவனங்கள் உலக அளவில் வேலை நீக்க அறிவிப்பை வெளியிடுகிறது என்பதும் இதனால் ஏராளமான ஊழியர்கள் வேலை இழந்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் அமெரிக்காவை சேர்ந்த முக்கிய நிறுவனங்களில் ஒன்றான Sprinklr என்ற நிறுவனம் தனது உலகளாவிய பணியாளர்களில் நான்கு சதவீதம் ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

கடந்த வாரம் பணி நீக்க நடவடிக்கையை தொடங்கியதாகவும் இந்த வாரம் இது குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளதாகவும் Sprinklr நிறுவனத்தின் செய்தி குறிப்பு தெரிவித்துள்ளது. இந்தியா, அமெரிக்கா உட்பட உலகின் பல பகுதிகளில் Sprinklr நிறுவனத்தின் கிளைகள் இருக்கும் நிலையில் மிக அதிக அளவில் வேலை நீக்க நடவடிக்கையில் பாதிக்கப்பட்டது இந்தியர்கள் தான் என்று கூறப்படுகிறது.

இந்த முடிவுகளை எடுப்பது தங்களுக்கு மிகவும் கடினமானது என்றாலும் மாறிவரும் பொருளாதார மந்த நிலை, பணவீக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் நிறுவனத்தின் வெற்றிக்காக எடுக்கப்பட்ட சரியான முடிவாக பார்க்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் எங்கள் ஊழியர்கள் மிகுந்த அக்கறையுடனும் மரியாதையுடனும் பணி செய்தார்கள் என்றும் அவர்களுடைய பங்களிப்புக்கு எங்களது நன்றிகள் என்றும் வேலை நீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு தேவையான உதவிகள் அனைத்தும் வழங்கப்படும் என்றும் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி 7ஆம் தேதி Sprinklr நிறுவனம் தனது வேலை நீக்க நடவடிக்கையை அறிவித்ததாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஆனால் அதே நேரத்தில் வேலை நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கையை குறித்து Sprinklr தனது அறிக்கையில் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜனவரி மாதத்தின் இந்நிறுவனத்தில் உலக அளவில் மொத்தம் 3245 பணியாளர்கள் பணி செய்து கொண்டிருந்தார்கள் என்றும் இதில் இந்தியர்கள் மட்டும் 1800 பேர் என்றும், அமெரிக்கர்கள் 933 பேர் என்றும் தெரிகிறது. வேலைநீக்கம் செய்யப்பட்டவர்களில் பெரும்பாலும் இந்தியர்களாக இருக்கலாம் என்று கூறப்படுவதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

author avatar
seithichurul
வேலைவாய்ப்பு12 நிமிடங்கள் ago

அரசு வேலைக்கு தட்டச்சு பயிற்சி அவசியம்: தேர்வர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஆன்மீகம்27 நிமிடங்கள் ago

சனி பகவானின் ஆசிர்வாதம்: கிச்சடி உணவின் ஆன்மீக முக்கியத்துவம்!

இந்தியா2 மணி நேரங்கள் ago

ஐபோன் விலையில் அதிரடி குறைப்பு!

வேலைவாய்ப்பு2 மணி நேரங்கள் ago

ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

செய்திகள்2 மணி நேரங்கள் ago

BSNL-க்கு மாறி வருகிறார்கள்: ஜியோ, ஏர்டெல் கவலை!

சினிமா2 மணி நேரங்கள் ago

ராயன் படத்தின் முதல் நாள் வசூல் கலக்கு! ரூ.12 கோடிக்கும் மேல்!

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

ரூ.35,000/- சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

வேப்பிலை முதல் துளசி வரை: இயற்கையின் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டு மருந்துகள்!

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

ரூ.35,000/- சம்பளத்தில் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

உங்கள் மன அழுத்தத்தை குறைத்து, ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் உணவுகள்!

பல்சுவை5 நாட்கள் ago

“கேரளா ஸ்டைல் கடலை கறி: சுவையான மற்றும் சத்தான குழம்பு”!

வணிகம்4 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் குறையும் தங்கம் விலை (23/07/2024)!

வணிகம்3 நாட்கள் ago

திடீர் எனச் சரிந்து வரும் தங்கம் விலை (24/07/2024)!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

3,789 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்கள்: தமிழ்நாட்டில் அபார வாய்ப்பு!

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலையில் மாற்றமில்லை (21/07/2024)!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024-25-இல் ஸ்டார்ட்அப்-களுக்கு அடித்த ஜாக்பாட்!

வணிகம்4 நாட்கள் ago

2024 பட்ஜெட்: விலை குறையும், அதிகரிக்கும் பொருட்கள்

வணிகம்6 நாட்கள் ago

தினமும் 14 மணிநேர வேலைக்கு அனுமதி கேட்கும் ஐடி நிறுவனங்கள்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஊழியர்கள்!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024: உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? புதிய திட்டம் – என்.பி.எஸ். வாத்ஸல்யா

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!