இந்தியா
பாதுகாப்பு அளிக்காமல் ஏமாற்றிவிட்டனர்.. 2 சிஆர்பிஎப் வீரர்களை பறிகொத்த தமிழகம்!
![52527207_415890789182660_2843316754233425920_n - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2019/02/52527207_415890789182660_2843316754233425920_n.png)
சென்னை: சிஆர்பிஎப் வீரர்களுக்கு சரியாக பாதுகாப்பு கொடுக்காமல் அரசு ஏமாற்றிவிட்டது என்று புல்வாமா தாக்குதலில் பலியான சிஆர்பிஎப் வீரர் சுப்பிரமணியனின் மனைவி பேட்டியளித்துள்ளார்.
புல்வாமாவில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரரகள் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் காரணமே இந்தியாவே கொதித்து போய் இருக்கிறது.
காஷ்மீர் தொடங்கி கன்னியகுமரி வரை இந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்த இரண்டு ராணுவ வீரர்களும் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேவுள்ள சிவலப்பேரியை சேர்ந்த சி.ஆர்.பி.எஃப் பாதுகாப்பு படை வீரர் சுப்பிரமணியன் இந்த தாக்குதலில் பலியானார். அதேபோல் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவசந்திரன் இந்த தாக்குதலில் பலியானார். இவர்களுக்கு தமிழக அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து இருந்தனர்.