தமிழ்நாடு
நட்டத்தில் இயங்கி வரும் சென்னை விமான நிலையம்.. அரசு எடுக்கப் போகும் முடிவு என்ன?
சென்னை விமான நிலையம் நட்டத்தில் இயங்கி வருவதாக விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் உள்ள விமான நிலையங்களில் அதிக நட்டத்துடன் செயல்பட்டு வரும் விமான நிலையம் என்றால் அது சென்னை விமான நிலையம் தான் என மாநிலங்கவையில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2021-2022 நிதியாண்டு மட்டும் சென்னை விமான நிலையத்தால் 189 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளது. இந்திய விமான நிலைய ஆணையத்தால் நிர்வகிக்கப்படும் 124 விமான நிலையங்களில் இதுவே மிக அதிகம் நட்டம் ஏற்படுத்தும் விமான நிலையம் ஆகும்.
சென்னை விமான நிலையத்தால் ஏற்படும் நட்டத்தைக் குறைக்க, விமான நிலையத்துக்குச் சொந்தமான பயன்படுத்தப்படாத இடங்களைத் தனியார் நிறுவனங்களுக்குக் குத்தகைக்கு விட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் சென்னை விமான நிலையத்தில் விமானம் அல்லாத வருவாய் அதிகரிக்கும் என திட்டமிட்டுள்ளதாக விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் மாநிலங்களவையில் கூறியுள்ளார்.
சென்னைக்கு அடுத்தபடியாக டேராடூன் விமான நிலையம் 98.02 நட்டம் அடைந்துள்ளது. அகர்தலா விமான நிலையம் 80.67 கோடி ரூபாய் நட்டம் அடைந்துள்ளது.
விமான நிலையங்கள் நட்டம் அடைந்ததில் கொரோனா தொற்றுக்கு பெரும் பங்கு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் சென்னை விமான நிலையத்தில் இந்தியாவின் முதல் விமான நிலையம் திரையங்கு திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.