Connect with us

இந்தியா

அரசு கொடுத்த மானிய தொகை.. கள்ளக்காதலர்களுடன் ஓடிய 4 பெண்கள்: பரிதாபத்தில் கணவர்கள்..!

Published

on

மத்திய அரசு வீடு கட்ட கொடுத்த மானிய தொகையுடன் கள்ளக்காதலர்களுடன் நான்கு பெண்கள் கணவர்களை அம்போ என தவிக்க விட்டு விட்டு ஓடிய சம்பவம் உத்தரபிரதேசம் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய அரசின் முக்கிய திட்டங்களில் ஒன்று பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் என்பதும் இந்த திட்டம் வீடு கட்டுவதற்காக மானியத்துடன் கடன் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திட்டத்தின்படி வீட்டின் உரிமையாளராக குடும்ப தலைவி இருக்க வேண்டும் என்பதும் அவருடைய வங்கி கணக்கில்தான் மானியத்துடன் கூடிய வீடு கட்டும் பணம் வரும் என்பதும் குறிப்பிடத்தக்கது. வீடு வாங்கவோ அல்லது வீடு கட்டுவதோ குடும்பத் தலைவியின் பெயரில் தான் இருக்க வேண்டும் என்றும் விதிகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் உத்தரப்பிரதேசத்தில் நான்கு பெண்கள் தங்கள் வீடு கட்டுவதற்காக விண்ணப்பித்திருந்த நிலையில் அவர்களுக்கு முதல் கட்டமாக ரூபாய் 50,000 மானிய பணம் வங்கி கணக்கிற்கு கிடைத்தது. இந்த பணம் கிடைத்தவுடன் அந்த நான்கு பெண்களும் பணத்தை எடுத்துக்கொண்டு தங்களுடைய காதலர்களுடன் கணவரை அம்போ என விட்டு விட்டு ஓடி விட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காதலர்களுடன் அந்த நான்கு பெண்கள் சென்ற நிலையில் அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பது இதுவரை தெரியவில்லை. இந்த நிலையில் ஏற்கனவே மனைவிகள் ஓடி விட்ட கவலையில் இருக்கும் கணவர்கள் கூடுதலாக அரசு அதிகாரிகளின் எச்சரிக்கையையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

மானியத்தொகை பெற்றவுடன் அடுத்த சில நாட்களுக்கு வீட்டின் பணியை தொடங்க வேண்டும் என்பது விதி என்பதால் ஏன் இன்னும் வீட்டுக்கு பணியை தொடங்கவில்லை என அரசு அதிகாரிகள் கணவர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். ஒரு கட்டத்தில் வேறு வழியில்லாமல் அரசு அதிகாரிகளை சந்தித்த நான்கு கணவர்களும் தங்கள் மனைவிமார்கள் பணத்துடன் காதலர்களுடன் ஓடிவிட்டார்கள் என்று கூறியதை அடுத்து அதிகாரிகளும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனை அடுத்து காவலர்கள் அந்த நான்கு பெண்களை தேடும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். பெண்கள் கிடைத்தவுடன் அவர்களை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்து வந்து வீடு கட்டும் பணியை தொடங்க வேண்டும் என்றும் இல்லையென்றால் கணவர்கள் மீது தான் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இந்த வினோதமான சம்பவம் காரணமாக அந்த பகுதியில் உள்ள மக்கள் பெரும் பரபரப்புடன் உள்ளனர்.

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் (20/10/2024)

வணிகம்1 நாள் ago

இன்று புதிய உச்சத்தை தொட்ட தங்கம், வெள்ளி விலை!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்1 நாள் ago

இன்றைய ராசிபலன் (19/10/2024)

செய்திகள்2 நாட்கள் ago

ஆளுநர் ரவி தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘திராவிடம்’ நீக்கம் – முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்!

வேலைவாய்ப்பு2 நாட்கள் ago

ஒரே நாளில் 45,000 வேலைவாய்ப்புகள்! – தமிழக அரசின் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்கள்!

ஜோதிடம்2 நாட்கள் ago

குரு வக்ர பெயர்ச்சி: நற்பலன் பெறும் ராசிகள் யாவர்?

செய்திகள்2 நாட்கள் ago

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு!

செய்திகள்2 நாட்கள் ago

இந்தி மொழி திணிப்பு இல்லை: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கருத்து!

வணிகம்2 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு(18-10-2024)!

ஜோதிடம்3 நாட்கள் ago

500 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம் – இந்த 3 ராசிக்காரர்களுக்கு செல்வம் குவியவிருக்கிறது!

வணிகம்4 நாட்கள் ago

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ரூ.360 வரை உயர்வு!

வணிகம்4 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(16-10-2024)

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

TNPSC குரூப் 5A வேலைவாய்ப்பு அறிவிப்பு – விண்ணப்பிக்கலாம்! முழு விவரங்கள் உள்ளே!

வணிகம்3 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் உயரும் தங்கம் விலை!(17-10-2024)

தமிழ்நாடு4 நாட்கள் ago

சென்னை மழைப் பேரிடரில் பாதிக்கப்பட்டோருக்கு முதல்வர் ஸ்டாலின் இலவச உணவு அறிவிப்பு!

சினிமா3 நாட்கள் ago

இயக்குனராக அவதாரம் எடுக்கும் யுவன் சங்கர் ராஜா!

ஆன்மீகம்3 நாட்கள் ago

குரு சாட்டையை எடுத்துவிட்டார்: அக்டோபர் முதல் தங்கத்தில் அடி விழும் ராசிகள்! மகிழ்ச்சியின் திருப்பம்!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – அக்டோபர் 15, 2024

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

ரூ.42,500/- சம்பளத்தில் BHEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (16/10/2024)