Connect with us

இந்தியா

ரூபாய் நோட்டு தரும் ஏடிஎம் போல் நாணய இயந்திரம்: ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு..!

Published

on

ஏடிஎம் மெஷினில் இருந்து ரூபாய் நோட்டுக்கள் பெற்று கொள்வது போல் இனி நாணயங்களை எடுப்பதற்கு என தனியாக இயந்திரம் அறிமுகம் செய்யப்படும் என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை குழு கடந்த இரண்டு நாட்களாக மும்பையில் ஆலோசனை நடத்திய நிலையில் இந்த ஆலோசனையில் ரெப்போ வட்டி விகிதம் உயர்த்துவதாக அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து 0.25 சதவீதம் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டதை அடுத்து 6.5 சதவீதமாக தற்போது ரெப்போ வட்டி விகிதம் உயர்ந்துள்ளது. கடந்த ஒரே ஆண்டில் 2.50 சதவீதம் ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் அறிவித்த முக்கிய அறிவிப்பில் க்யூஆர் கோடு அடிப்படையில் சில்லரை ஆணையங்கள் வழங்கும் இயந்திரங்கள் அறிமுகம் செய்யப்படும் என்றும் முதல் கட்டமாக 12 நகரங்களில் இந்த இயந்திரங்கள் வைக்கப்படும் என்றும் அதன் பின் படிப்படியாக இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் இந்த இயந்திரம் வைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

#image_title

கியூஆர் கோடு அடிப்படையில் ஆன இந்த நாணயங்கள் வழங்கும் இயந்திரம் யுபிஐ மூலம் பரிமாற்றம் செய்யப்படும் என்றும் சில்லரை நாணயங்களை வழங்கி அந்த தொகை வங்கி கணக்கிலிருந்து டெபிட் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒருசில நாடுகளில் ஏற்கனவே நாணயங்கள் வழங்கும் இயந்திரம் இருந்தாலும் அவை பணத்தை அளித்துவிட்டு அதற்கு ஈடாக நாணயங்கள் வழங்குவது போல் இருக்கும், ஆனால் இந்த நாணய இயந்திரம் யுபிஐ அடிப்படையில் இயங்கும் என்றும் தங்கள் வங்கி கணக்கிலிருந்து பணத்தை டெபிட் செய்து விட்டு அதற்கு பதிலாக நாணயங்களை இயந்திரத்தின் மூலம் பெற்றுக் கொள்ளலாம் என்றும் சக்தி காந்த தாஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

முதல் கட்டமாக இந்த நாணய இயந்திரங்கள் 12 நகரங்களில் 19 இடங்களில் பரிசோதனை முயற்சியாக வைக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாகவும், குறிப்பாக நாணயங்கள் அதிகம் தேவைப்படும் ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், ஷாப்பிங் மால்கள், காய்கறி மார்க்கெட்டுகள் ஆகிய பகுதிகளில் வைக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

மிகவும் எளிதாக நாணயங்களை பெறும் வகையில் இதில் வசதி செய்யப்படும் என்றும் பரிசோதனை முயற்சியாக அறிமுகம் செய்த பின் இதில் உள்ள சிக்கல்களை அறிந்து அதன் பின் நாடு முழுவதும் நாணய இயந்திரங்கள் நிறுவப்படும் என்றும் சக்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளார்.

நாணயங்கள், சக்தி காந்த தாஸ், ரிசர்வ் வங்கி,

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்1 மணி நேரம் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்11 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்11 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு11 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா11 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு11 மணி நேரங்கள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்11 மணி நேரங்கள் ago

H-1B விசா: இந்த ஆண்டும் இரண்டாம் சுற்று குலுக்கல்

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொழியும்!

ஆரோக்கியம்12 மணி நேரங்கள் ago

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 9 காரணங்கள்!

வணிகம்5 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

வணிகம்4 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்4 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

ஓய்வு காலத்தில் நிலையான மாத வருமானம் வழங்கும் 5 சிறந்த திட்டங்கள்!