இந்தியா
அதானி குழுமங்களின் செய்தி வெளியிட தடையா? சுப்ரீம் கோர்ட் என்ன சொல்கிறது?
![adani holcim1 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/05/adani-holcim1.jpg)
அதானி குழுமங்களின் செய்திகளை செபியின் அனுமதியின்றி வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் வதந்தி செய்திகளால் பங்குச்சந்தை மிகப்பெரிய சரிவை சந்தித்து வருகின்றன என்றும் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனமான ஹின்டன்பெர்க் என்ற நிறுவனத்தின் அறிக்கை காரணமாக அதானி குழுமங்களின் பங்குகள் மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளன என்பதும் இந்த நிறுவனங்களில் முதலீடு செய்தவர்களுக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அது மட்டுமின்றி அதானி குழுமங்கள் குறித்த செய்திகள் நாள்தோறும் ஊடகங்களில் வெளியாகி வருவதால் முதலீட்டாளர்கள் பதட்டம் அடைந்து தங்கள் முதலீட்டை வெளியே எடுக்கின்றனர் என்றும் அதனால் மென்மேலும் பங்குகள் சரிந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்திகளின் உண்மை தன்மை குறித்து சந்தேகம் எழுப்பி உள்ள அதானி குழுமம் தற்போது செபியின் அனுமதி இன்றி அதானி குழுமத்தின் செய்திகளை வெளியிட ஊடகங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது.
வழக்கறிஞர் சர்மா என்பவர் தாக்கல் செய்துள்ள இந்த மனுவில் அதானி குழுமங்கள் குறித்து ஊடகங்கள் மிகைப்படுத்தி செய்து வெளியிடுகின்றன என்றும் இதனால் இந்திய பங்குச்சந்தை மிகப்பெரிய சரிவை சந்தித்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊடகங்களின் செய்திகள் காரணமாக முதலீட்டாளர்கள் அச்சமடைந்து தங்கள் பங்குகளை விற்பனை செய்து வருகின்றார்கள் என்றும் அதனால் மிகப்பெரிய நிதி இழப்பு ஏற்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் செபியின் அனுமதி இன்றி அதானி குழுமங்களின் செய்திகளை வெளியிட நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும் என்றும் இந்திய பங்குச் சந்தைகளை செயற்கையாக சரியும் வகையில் ஊடகங்கள் சில செய்திகள் வெளியிட்டு வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு விசாரணைக்கு இன்னும் பட்டியல் இடப்படவில்லை என்றாலும் விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.