இந்தியா
8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த காமுகனுக்கு 40 ஆண்டுகள் கடுங்காவல்!
![Rape - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2023/02/Rape.jpg)
தனியாக இருந்து சிறுமியை அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்த காமுகனுக்கு 3 ஆண்டுகள் விசாரணைக்கு பின்னர் 40 ஆண்டுகள் கடுங்காவல் சிறத்தண்டனை வழங்கியுள்ளது நீதிமன்றம்.
![2 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2023/02/2-1.jpg)
#image_title
கேரள மாநிலம் திருச்சூர் பகுதியை சேர்ந்த 46 வயதான கூலித்தொழிலாளி சந்தோஷ் என்பவர் கடந்த 2019-ஆம் ஆண்டு அந்த பகுதியில் இருந்த ஒரு வீட்டிற்குள் அத்துமீறு நுழைந்தார். பின்னர் அங்கு தனியாக இருந்த 8 வயது சிறுமியை பலவந்தமாக மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர் அங்கிருந்து தப்பித்தும் சென்றுவிட்டார்.
இதனையடுத்து நடந்த சம்பவங்களை அறிந்த 8 வயது சிறுமியின் பெற்றோர் சந்தோஷ் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் குற்றவாளியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு திருச்சூர் குன்னம்குளம் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிமன்றம் தற்போது காமுகன் சந்தோஷுக்கு 40 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூபாய் 1.50 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.