Connect with us

இந்தியா

காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்; 44 வீரர்கள் பலி: நாடே சோகத்தில் மூழ்கியது!

Published

on

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு மற்றும் தற்கொலைப்படை தாக்குதலில் 44 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். இந்த சம்பவத்தால் நாடே சோகத்தில் மூழ்கியுள்ளது. இதற்கு பல நாடுகளை சேர்ந்த தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து பாதுகாப்பு படை வீரர்கள் அந்த பகுதியை சுற்றிவளைத்தனர். இதனையடுத்து தீவிரவாதிகளுக்கும், நமது எல்லை பாதுகப்புபடை வீரர்களுக்கும் இடையே துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடந்தது.

இந்த தாக்குதலில் நமது வீரர் ஒருவர் பலியானார். அதே நேரத்தில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டார். அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் 300 கிலோ எடை கொண்ட வெடிபொருட்களை காரில் நிரப்பி வந்த தீவிரவாதி ஒருவன் சிஆர்பிஎஃப் வீரர்கள் இருந்த வாகனத்தின் மீது மோதச்செய்து தாக்குதல் நடத்தினான். இதில் 44 சிஆர்பிஎஃப் வீரர்கள் பலியாகினர். நாட்டையே சோகத்தில் ஆழ்த்திய இந்த துயரச்சம்பவம் புல்வாமா-ஜம்மு நெடுஞ்சாலையில் நடந்துள்ளது.

தீவிரவாதிகள் தாக்குதலால் பல வீரர்கள் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தானைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு இந்த தாக்குதலை நடத்தியதாகப் பொறுப்பேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த தாக்குதலுக்கு எங்கள் நாடு எந்தவிதத்திலும் காரணமல்ல என பாகிஸ்தான் விளக்கம் அளித்துள்ளது.

தீவிரவாதிகளின் இந்த தாக்குதலுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, உபி முதல்வர் யோகி, இலங்கை, ரஷ்யா, பூட்டான், மாலத்தீவு உள்ளிட்ட பல நாட்டு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்6 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்15 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்15 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு16 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா16 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு16 மணி நேரங்கள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்16 மணி நேரங்கள் ago

H-1B விசா: இந்த ஆண்டும் இரண்டாம் சுற்று குலுக்கல்

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொழியும்!

ஆரோக்கியம்16 மணி நேரங்கள் ago

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 9 காரணங்கள்!

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

வணிகம்5 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

வணிகம்5 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

வணிகம்4 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்

வணிகம்3 நாட்கள் ago

ஐடி துறையில் தொடரும் பணி நீக்கம்: 1,30,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இதுவரை பாதிப்பு!