Connect with us

இந்தியா

பணிப்பெண்ணிடம் உதவி கேட்ட பெண் பயணியை விமானத்தில் இருந்து இறக்கிவிட்ட கொடூரம்.. என்ன நடந்தது?

Published

on

விமானத்தில் பயணம் செய்த பெண் பயணி ஒருவர் பணிப்பெண்ணிடம் உதவி கேட்டதை அடுத்து அந்த பெண் பயணி விமானத்திலிருந்து இறக்கி விடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களாகவே விமானத்தில் நடக்கும் சர்ச்சைக்குரிய விஷயங்கள் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன் போதை பயணி ஒருவர் பெண் பயணி ஒருவர் மீது சிறுநீர் கழித்த விவகாரம் ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியதோடு அந்த நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்பது தெரிந்ததே. இந்த சம்பவத்தில் விமான நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண் ஒருவர் தனது பையை மேலே வைக்க பணிப்பெண்ணிடம் உதவி கேட்டதால் அவர் விமானத்திலிருந்து இறக்கி விடப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியில் இருந்து அமெரிக்கா செல்ல இருந்த பெண் பயணி ஒருவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்திருந்ததாகவும் அதனால் பலவீனமாக இருந்ததாகவும் தெரிகிறது. மீனாட்சி சென்குப்தா என்ற அந்த விமான பயணி தனது கையில் ஐந்து பவுண்டுக்கு மேல் எடை உள்ள பைப்பையை வைத்திருந்தார்.

விமான நிலையத்தில் உள்ள அதிகாரிகள் அவருக்கு மிகவும் உறுதுணையாக இருந்து அவருக்கு சக்கர நாற்காலி கொடுத்து விமானத்தில் ஏற உதவி செய்தனர். ஆனால் விமானத்திற்கு உள்தான் அவருக்கு பல அசெளகரியங்கள் ஏற்பட்டன. தனது இருக்கை அருகிலேயே அவர் தனது பையை வைத்திருந்த நிலையில் பணிப்பெண் ஒருவர் வந்து பையை கேபினில் வைக்குமாறு சொன்னார்.

அப்போது அந்த பெண் பயணி தன்னால் இந்த பையை தூக்க முடியாது என்றும் நீங்கள் உதவி செய்தால் கேபினில் வைத்து விடுகிறேன் என்றும் கூறினார்.. ஆனால் அதற்கு அந்த பணியாளர் அது தன்னுடைய வேலை அல்ல என்றும் உடனடியாக பையை வைக்க விட்டால் நீங்கள் விமானத்திலிருந்து இறங்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் கூறியதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.

இதனை அடுத்து பெண் பயணி மீனாட்சி சென்குப்தா விமானத்தில் விதிகளை கடைபிடிக்கவில்லை என்று கூறி இறக்கிவிடப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்த விஷயம் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சகம் மற்றும் டெல்லி மகளிர் ஆணையம் ஆகியவற்றுக்கு மீனாட்சி சென்குப்தா புகார் அளித்துள்ளார்.

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்3 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் (20/10/2024)

வணிகம்1 நாள் ago

இன்று புதிய உச்சத்தை தொட்ட தங்கம், வெள்ளி விலை!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்1 நாள் ago

இன்றைய ராசிபலன் (19/10/2024)

செய்திகள்2 நாட்கள் ago

ஆளுநர் ரவி தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘திராவிடம்’ நீக்கம் – முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்!

வேலைவாய்ப்பு2 நாட்கள் ago

ஒரே நாளில் 45,000 வேலைவாய்ப்புகள்! – தமிழக அரசின் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்கள்!

ஜோதிடம்2 நாட்கள் ago

குரு வக்ர பெயர்ச்சி: நற்பலன் பெறும் ராசிகள் யாவர்?

செய்திகள்2 நாட்கள் ago

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு!

செய்திகள்2 நாட்கள் ago

இந்தி மொழி திணிப்பு இல்லை: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கருத்து!

வணிகம்2 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு(18-10-2024)!

ஜோதிடம்3 நாட்கள் ago

500 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம் – இந்த 3 ராசிக்காரர்களுக்கு செல்வம் குவியவிருக்கிறது!

வணிகம்4 நாட்கள் ago

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ரூ.360 வரை உயர்வு!

வணிகம்4 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(16-10-2024)

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

TNPSC குரூப் 5A வேலைவாய்ப்பு அறிவிப்பு – விண்ணப்பிக்கலாம்! முழு விவரங்கள் உள்ளே!

வணிகம்3 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் உயரும் தங்கம் விலை!(17-10-2024)

தமிழ்நாடு4 நாட்கள் ago

சென்னை மழைப் பேரிடரில் பாதிக்கப்பட்டோருக்கு முதல்வர் ஸ்டாலின் இலவச உணவு அறிவிப்பு!

சினிமா3 நாட்கள் ago

இயக்குனராக அவதாரம் எடுக்கும் யுவன் சங்கர் ராஜா!

ஆன்மீகம்3 நாட்கள் ago

குரு சாட்டையை எடுத்துவிட்டார்: அக்டோபர் முதல் தங்கத்தில் அடி விழும் ராசிகள்! மகிழ்ச்சியின் திருப்பம்!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – அக்டோபர் 15, 2024

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (16/10/2024)

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

ரூ.42,500/- சம்பளத்தில் BHEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!