Connect with us

இந்தியா

நகைக்கடையை கொள்ளையடிக்க 15 அடி சுரங்கப்பாதை தோண்டிய திருடர்கள்.. அதன்பின் நடந்த டுவிஸ்ட்..!

Published

on

நகை கடைக்கு கொள்ளை அடிக்க 15 அடி சுரங்கப்பாதை தோண்டிய திருடர்கள் தங்களது முயற்சி பலனளிக்கவில்லை என்பதை அறிந்து நகைக்கடைக்காரர் இடம் மன்னிப்பு கேட்டுவிட்டு சென்ற சம்பவம் மீரட் நகரில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

மீரட் நகரில் உள்ள பிரதான பகுதியில் தீபக் என்பவர் நகைக்கடை வைத்து இருக்கிறார். இந்த கடைக்கு திருட இரண்டு கொள்ளையர்கள் முடிவு செய்து பல நாட்கள் ஆக நோட்டமிட்டுள்ளனர். அதன் பிறகு கிட்டத்தட்ட 15 நாட்களாக நகை கடைக்கு செல்லும் வகையில் 15 அடி நீளத்தில் சுரங்கம் தோண்டியதாக தெரிகிறது.

இதனை அடுத்து கொள்ளையடிக்க முடிவு செய்த தினத்தில் அந்த திருடர்கள் கேஸ் கட்டர்கள் உள்பட ஆயுதங்களை கொண்டு வந்து நகைக்கடையின் கதவை உடைத்து நகை கடைக்குள் நுழைந்தனர். ஆனால் நகைக்கடையில் உள்ள பெட்டகத்தையே அவர்களால் திறக்க முடியவில்லை. கேஸ் கட்டர்கள் இருந்தும் கேஸ் கட்டர் மூலம் அந்த பெட்டகத்தை திறக்க முடியாததால் அவர்கள் தங்கள் கொள்ளை முயற்சியில் தோல்வி அடைந்தனர்.

மேலும் அந்த பெட்டகம் அருகே கிருஷ்ணர் சிலை இருந்தது. அந்த சிலையை அவர்கள் திருப்பி வைத்துள்ளதாக தெரிகிறது. நாம் திருடுவதை கடவுள் பார்க்க கூடாது என்பதற்காக அவர்கள் சிலையை திருப்பி வைத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து ஒரு கட்டத்தில் இனிமேல் பெட்டகத்தை திறக்க முடியாது என்று முடிவு செய்ததை அடுத்து அந்த கொள்ளையர்கள் சுவற்றின் மேல் ’சாரி’ என்று எழுதி அதன் பிறகு மாயமாகிவிட்டதாக தெரிகிறது.

மறுநாள் தீபக் தனது நகைக்கடையை திறக்க வந்த போது சுவரில் ஓட்டை போடப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதனை அடுத்து உள்ளே சென்று பார்த்தபோது பெட்டகத்தில் எந்த நகையும் திருடப்படவில்லை என்பதை அறிந்து அவர் நிம்மதி அடைந்தார். இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் விரைந்து வந்து விசாரணையை தொடங்கினார்.

சிசிடிவி கேமராக்களின் ஹார்ட் டிஸ்க்கையும் திருடர்கள் திருடி சென்று விட்டதால் அந்த பகுதியில் உள்ள மற்ற சிசிடிவி கேமராக்கள் மூலம் திருடர்களை அடையாளம் காண முயற்சி செய்தனர். நீண்ட முயற்சிக்கு பிறகு திருடர்கள் சுன்னு மற்றும் முன்னு ஆகிய இருவர் என அடையாளம் காணப்பட்டனர். அவர்கள் இருவரையும் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

நகைக்கடையை கொள்ளையடிக்க சென்ற கொள்ளையர்கள் அந்த முயற்சி பலனளிக்காததால் நகைக்கடை ஓனருக்கு சாரி சொல்லி விட்டு சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
seithichurul
தினபலன்49 நிமிடங்கள் ago

இன்றைய (27/09/2024) ராசிபலன்

ஆரோக்கியம்12 மணி நேரங்கள் ago

சாதம் சாப்பிட்டாலும் உடல் எடையை குறைக்கலாம்!

ஆரோக்கியம்12 மணி நேரங்கள் ago

செவ்வாழை: தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுவதன் நன்மைகள்!

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

நவராத்திரி 2024: தேதிகள், சிறப்புகள் மற்றும் விவரங்கள்!

ஆரோக்கியம்12 மணி நேரங்கள் ago

காடை வாங்கினா இப்படி ஒருமுறை வறுவல் செஞ்சு பாருங்க… சுவையாக இருக்கும்!

வணிகம்12 மணி நேரங்கள் ago

ஜியோவின் தீபாவளி தமாகா: ஒரு வருட இலவச இணையம், ஆனாலும் ஒரு நிபந்தனை!

ஆரோக்கியம்12 மணி நேரங்கள் ago

வெண்டைக்காய் நல்லது, ஆனாலும் இவர்கள் மட்டும் சாப்பிடக்கூடாது!

ஆரோக்கியம்13 மணி நேரங்கள் ago

முள்ளங்கியுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள் – எச்சரிக்கையுடன் இருங்கள்!

செய்திகள்13 மணி நேரங்கள் ago

தேசிய குடும்ப தினம்: குடும்ப உறவுகளை கொண்டாடும் சிறப்புநாள்!

வேலைவாய்ப்பு15 மணி நேரங்கள் ago

ரூ.34,000/- ஊதியத்தில் தமிழக அரசில் தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கான வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு4 நாட்கள் ago

ரூ.15 லட்சம் சம்பளத்தில் டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு!

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்4 நாட்கள் ago

செப்டம்பர் 23 முதல் செப்டம்பர் 29 வரையிலான வார ராசிபலன்!

சினிமா4 நாட்கள் ago

OTT-யில் அதிரவைக்கும் சைக்கோ திரில்லர்: உண்மை சம்பவத்தை தழுவி வந்த Sector 36!

ஆரோக்கியம்4 நாட்கள் ago

படிகாரம்: ஆரோக்கியத்திற்கும் அற்புதமாய் பயன்படும்!

ஆரோக்கியம்4 நாட்கள் ago

ஒரு வயது வரை குழந்தைகளுக்கு இந்த உணவுகள் வேண்டாம்!

வேலைவாய்ப்பு4 நாட்கள் ago

IT துறையில் வேலை தேடுபவரா நீங்கள்? Accenture நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (22-09-2024)

வணிகம்2 நாட்கள் ago

ஏர்டெல்-ன் மூன்று புதிய பிரீபெய்ட் திட்டங்கள் அறிமுகம்!

இந்தியா1 நாள் ago

ரூ. 10,000 முதலீடு செய்தால் ரூ. 31 லட்சம் கிடைக்கும்…! அசத்தலான POST OFFICE திட்டம்!

வேலைவாய்ப்பு4 நாட்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் HPCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!