சினிமா
நாலு பேர்.. நாலு கதை.. வெளியானது செக்கச்சிவந்த வானம் பட போஸ்டர்!
சென்னை: அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள செக்கச்சிவந்த வானம் படத்தின் போஸ்டர் வெளியாகி உள்ளது.
கடைசியாக கார்த்தியை வைத்து காற்று வெளியிட படம் எடுத்த மணிரத்னம் தற்போது செக்கச்சிவந்த வானம் படத்தை இயக்கி உள்ளார். அவரது ஸ்டைலான மல்டி ஸ்டார் நடிப்பில் இந்த படம் வெளியாக உள்ளது.
சிம்பு, அருண் விஜய், விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி நடிப்பில் இந்த படம் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் சிம்பு ஏத்தி என்ற பெயரிலும், விஜய் சேதுபதி ரசூல் என்ற பெயரிலும், அருண் விஜய் தியாகு என்று பெயரிலும், அரவிந்த் சாமி வரதன் என்ற பெயரிலும் நடிக்கிறார்கள்.
அதேபோல் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்கள். இந்த படத்தின் நான்கு தனி தனி போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி இருந்தது.
இப்போது படத்தின் தனி போஸ்டர் வெளியாகி உள்ளது. படம் செப்டம்பர் மாதம் 28ம் தேதி வெளியாக உள்ளது.