Connect with us

உலகம்

வேலைநீக்க நடவடிக்கை இல்லை.. ஆனாலும் அதிர்ச்சி அடைந்த ஆப்பிள் ஊழியர்கள்!

Published

on

வேலைநீக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றாலும் சில முக்கிய அறிவிப்புகளை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளதால் அந்நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பொருளாதார மந்த நிலை, பணவீக்கம், வட்டி உயர்வு உள்பட பல்வேறு காரணங்களால் கூகுள் உள்பட பல நிறுவனங்களில் வேலைநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். கூகுள், மைக்ரோசாப்ட், அமேசான், பேஸ்புக், டுவிட்டர் ஆகிய நிறுவனங்கள் தங்களிடம் பணி புரியும் ஆயிரக்கணக்கான ஊழியர்களை வேலை நீக்கம் செய்தபோதிலும் ஆப்பிள் நிறுவனம் இதுவரை வேலை நீக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இனி மேலும் வேலை மிக்க நடவடிக்கை இருக்காது என்றும் அந்நிறுவனம் உறுதிபட தெரிவித்துள்ளது.

ஆனால் அதே நேரத்தில் சில சலுகைகளை ரத்து செய்ய ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது. இதுவரை வீட்டில் இருந்து வேலை செய்து கொண்ட ஊழியர்கள் பிப்ரவரி மாதம் முதல் கண்டிப்பாக அலுவலகன் வர வேண்டும் என்றும் அலுவலகம் வரும் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படாது என்றும் ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் கொரோனா அறிகுறி உள்ளவர்கள் காலவரையற்ற விடுமுறை எடுக்கப்படும் சலுகைகளையும் ரத்து செய்வதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ஆப்பிள் நிறுவனத்தின் டுவிட்டரில் கூறிய போது ஆப்பிள் நிறுவனம் அதன் கோவிட் 19 கொள்கையில் சில மாற்றங்களை செய்து வருகிறது. அதன்படி இனிமேல் அலுவலகத்திற்கு வருபவர்கள் கொரோனா பரிசோதனை செய்யப்பட மாட்டார்கள் என தெரிவித்துள்ளது. அதேபோல் கொரோனா அறிகுறி இருப்பவர்களுக்கு எடுக்க அனுமதிக்கப்படும் விடுமுறையையும் ரத்து செய்யப்படுகிறது. இதனால் கொரோனா அறிகுறி உள்ளவர்கள் இனிமேல் காலவரையற்ற விடுமுறை எடுக்க முடியாது என்பது குறிப்பிடப்பட்டது.

மேலும் கொரோனா உள்ளிட்ட எந்த வகை நோயாக இருந்தாலும் எடுக்கக்கூடிய சிறப்பு விடுமுறை வரும் ஆகஸ்ட் மாதத்துடன் ரத்து செய்யப்படுவதாகவும் ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. எனவே நோய்வாய் பட்ட போது அதிகபட்சமாக ஐந்து நாட்கள் மட்டுமே இனி விடுமுறை எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

வீட்டில் இருந்து வேலை செய்யும் முறையை ஆப்பிள் நிறுவனம் நிறுத்திவிட்டதை அடுத்து கடந்த இரண்டு வருடங்கள் ஆக தொலைதூரத்தில் இருந்து வேலை செய்து வந்தவர்கள் இனி அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் ஆப்பிள் ஊழியர்கள் வாரத்தில் மூன்று நாட்கள் அலுவலகத்திலும் இரண்டு நாட்கள் வீட்டிலிருந்தும் பணி செய்து கொண்டிருந்த நிலையில் இனி தினமும் அலுவலகம் சென்று பணி செய்ய வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்5 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு6 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!