Connect with us

இந்தியா

ஊழியர்களுக்கு ரூ.15 லட்சம் வரை அபராதம் விதித்த ஏர் இந்தியா… என்ன காரணம்?

Published

on

ஏர் இந்தியா நிறுவனம் கடந்த சில நாட்களாக ஊடகங்களில் தலைப்பு செய்திகளில் இடம்பெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த போதை பயணி ஒருவர், பெண் பயணி மீது சிறுநீர் கழித்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு இந்த சம்பவத்திற்காக ஏர் இந்தியாவுக்கு ரூ.10 லட்சம் இந்திய விமானத்துறை அபராதம் விதித்தது.

இந்த நிலையில் தற்போது ஏர் இந்தியா தனது ஊழியர்களுக்கு 10 லட்சம் முதல் 15 லட்சம் வரை அபராதம் விதித்துள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏர் இந்தியா நிறுவனம் கடந்த ஆண்டு இந்திய அரசிடம் இருந்து விமான நிறுவனத்தை வாங்கும்போது அதன் ஊழியர்களையும் தொடர்ந்து நீடிக்க முடிவு செய்தது. ஆனால் தங்கும் இடங்கள் உள்பட ஒரு சில சலுகைகள் வழங்கப்படாது என்று கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில் மும்பையில் உள்ள ஏர் இந்தியா காலனி மற்றும் டெல்லியில் உள்ள வசந்த் விஹார் ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளில் தங்கி இருந்த ஏர் இந்தியா ஊழியர்கள் வீடுகளை காலி செய்ய வேண்டும் என கடந்த ஆண்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் இதுவரை காலி செய்யாத ஊழியர்களுக்கு அவர்களது சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்ய ஏர் இந்தியா திட்டமிட்டுள்ளது.

ஏர் இந்தியா ஊழியர்கள் தங்களது டிசம்பர் மாத சம்பளத்தில் 15 ஆயிரம் முதல் 90 ஆயிரம் வரை குறைத்து பெறுவார்கள் என்று கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இனியும் வீடுகளை காலி செய்யாமல் இருந்தால் வரும் நாட்களில் கூடுதல் தொகை அபராதமாக சம்பளத்தில் இருந்து கழிக்கப்படும் என ஏர் இந்தியா தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

மும்பையில் உள்ள ஏர் இந்தியா காலனி மற்றும் டெல்லியில் உள்ள வசந்த் விஹார் ஆகிய பகுதிகளில் வசிக்கும் ஏர் இந்தியா ஊழியர்களுக்கு மொத்தம் 10 லட்சம் முதல் 15 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் சம்பளம் உள்பட பிறவற்றிலிருந்து பிடித்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி சேத கட்டணமாக கூடுதல் தொகையை செலுத்த வேண்டும் என்றும் பொறுப்பு கட்டணம், அபராத வாடகை ஆகியவையும் செலுத்தப்பட வேண்டும் என்றும் ஏர் இந்தியா வீடுகளை காலி செய்யாத ஊழியர்களுக்கு தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் குடியிருப்பை காலி செய்ய வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியும், ஊழியர்கள் தொடர்ந்து காலி செய்யாமல் இருப்பதால் அபராதத்துடன் கூடிய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த மாதமும் காலி செய்யவில்லை என்றால் அடுத்த மாதம் கூடுதல் அபராதம் விதிக்கப்படும் என ஏர் இந்தியா தெரிவித்திருப்பது அந்நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்3 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்13 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்13 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு13 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா13 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு13 மணி நேரங்கள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்13 மணி நேரங்கள் ago

H-1B விசா: இந்த ஆண்டும் இரண்டாம் சுற்று குலுக்கல்

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொழியும்!

ஆரோக்கியம்13 மணி நேரங்கள் ago

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 9 காரணங்கள்!

வணிகம்5 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

வணிகம்5 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்4 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

ஓய்வு காலத்தில் நிலையான மாத வருமானம் வழங்கும் 5 சிறந்த திட்டங்கள்!

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்