இந்தியா
மும்பை மின்சார ரயிலில் பயன்படுத்தப்பட்ட ஆணுறை.. அதிர்ச்சியில் பயணிகள்!
மும்பை மின்சார ரயிலின் இருக்கையில் பயன்படுத்தப்பட்ட ஆணுறை ஒன்று இருந்ததை பார்த்த பயணி ஒருவர் புகைப்படம் எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மும்பை மக்களுக்கு போக்குவரத்து சாதனமாக இருக்கும் மின்சார ரயில்கள் குறித்து அவ்வப்போது பல புகார்கள் எழுப்பப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக மும்பை மின்சார ரயில்கள் சுகாதாரமற்று இருப்பதாகவும் பல சமூக குற்றங்கள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுவதுண்டு.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பயணி மின்சார ரயிலின் இருக்கையில் பயன்படுத்தப்பட்ட ஆணுறை ஒன்றை இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவர் சக பயணிகளிடம் அதை காண்பித்தபோது அனைவருமே அதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து அவர் அதை புகைப்படம் எடுத்து தனது டுவிட்டரில் பதிவு செய்து ரயில்வே துறையில் உள்ள அனைத்து அதிகாரிகளுக்கும் டேக் செய்துள்ளார்.
தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணம் செய்யும் மும்பை மின்சார ரயிலில் பயன்படுத்தப்பட்ட ஆணுறை ஒன்று இருப்பதை பார்த்து ரயில்வே அதிகாரிகளும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நள்ளிரவு நேரத்தில் ரயில்கள் கூட்டம் இல்லாமல் இருக்கும் நேரத்தில் முறைகேடுகள் நடந்ததா அல்லது வேறு எங்கேயும் ஆணுறையை பயன்படுத்திவிட்டு ரயிலின் இருக்கையில் போட்டு விட்டு சென்றார்களா என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
Well, what a sight. A used condom. Hello @drmmumbaicr, @RailMinIndia, @Central_Railway.This is 9.40 #Ambernath slow local. Trainhas crossed #CurreyRoad. @mumbairailusers. pic.twitter.com/C9tzNVB0Qf
— mazdur (@cinemaausher) January 23, 2023
ஏற்கனவே மும்பை மின்சார ரயிலில் அதிகாலை மற்றும் நள்ளிரவில் பல சமூக குற்றங்கள் நடைபெறுவதாக கூறப்பட்டு வருகிறது. குறிப்பாக பெண்களை அழைத்து வந்து சமூக குற்றம் நடைபெறுவது அதிகரித்து வருவதாக கூறப்படுவதுண்டு. இந்த நிலையில் தற்போது பயன்படுத்தப்பட்ட ஆணுறை கண்டெடுக்கப்பட்டுள்ளதை அடுத்து ரயில்வே துறை அதிகாரிகள் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த ட்வீட்டுக்கு ஏராளமானோர் தங்களது கண்டனங்களை தெரிவித்து கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர். பொதுமக்கள் பயன்படுத்த ஒரு ரயிலின் இருக்கையில் கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல் பயன்படுத்தப்பட்ட ஆணுறையை வீசி சென்றவரை கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.