Connect with us

வணிகம்

அமேசான், மைக்ரோசாப்ட்டை அடுத்து கூகுள்.. வேலையிழக்கும் 12 ஆயிரம் பேர்!

Published

on

2023ஆம் ஆண்டு யாருக்கு நல்ல ஆண்டுகாக இருக்கிறதோ இல்லையோ, நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மோசமான ஆண்டாகவே இருக்கும் என தெரிகிறது. இந்த ஆண்டு பிறந்த 20 நாட்கள் தான் ஆகியுள்ளன அதற்குள் முன்னணி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் ஆயிரக்கணக்கானோர் வேலை இழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே அமேசான் நிறுவனம் 18000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்வதாக அறிவித்து படிப்படியாக வேலை நீக்கம் செய்து வருகிறது. அமேசான் நிறுவனத்தில் வேலை இழந்த இந்தியர்கள் உள்பட பல நாட்டினர் தற்போது வேறு வேலையை தேடி வருகின்றனர்.

அதேபோல் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மைக்ரோசாப்ட் நிறுவனம் பத்தாயிரம் ஊழியர்களை வேலை நீக்கம் செய்வதாக அறிவித்தது. பொருளாதார தேக்க நிலை மற்றும் பணவீக்கம் காரணமாக சிக்கன நடவடிக்கைக்காக வேறு வழியில்லாமல் இந்த வேலை மிக்க நடவடிக்கை எடுப்பதாக மைக்ரோசாப்ட் சி.இ.ஓ சத்ய நாதெள்ள ன் அவர்கள் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அமேசான், மைக்ரோசாப்ட் ஆகிய இரண்டு பெரிய நிறுவனங்களை அடுத்து கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட் 12000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளதால் ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

இது குறித்து அந் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தர் பிச்சை அனைத்து ஊழியர்களுக்கும் அனுப்பிய மெமோவில் வேலைநீக்க நடவடிக்கை குறித்து குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கூகுள் நிறுவனத்தில் ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வேலைநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் 12 ஆயிரம் ஊழியர்கள் வேலை நீக்கம் என்பது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று வரை வேலையில் இருந்தவர்கள் இன்று திடீரென வேலையில்லை என்ற நிலை ஏற்பட்டால் அவர்களுடைய எதிர்காலம் என்ன ஆவது என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. முன்னணி நிறுவனங்கள் மட்டுமின்றி சிறிய ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் அவ்வப்போது வேலை நீக்க நடவடிக்கையை எடுத்து வருகின்றன.

பணவீக்கம் மற்றும் பொருளாதார மந்த நிலை சீரடைந்தால் மட்டுமே ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வேலை உறுதி என்ற நம்பிக்கை ஏர்படும் என்றும் அதுவரை அவ்வப்போது வேலை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு தான் வரும் என்றும் கூறப்படுகிறது. எனவே ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் எந்த நேரத்திலும் வேலையில் இருந்து நீக்கப்படுவோம் என்ற அச்சத்துடனே வேலை பார்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
seithichurul
வணிகம்3 மணி நேரங்கள் ago

ஜியோவின் புதிய OTT திட்டங்கள்: அதிரடி சலுகைகள்!

தமிழ்நாடு4 மணி நேரங்கள் ago

ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியால் போக்குவரத்து மாற்றம்!

வேலைவாய்ப்பு4 மணி நேரங்கள் ago

அரசு வேலைக்கு தட்டச்சு பயிற்சி அவசியம்: தேர்வர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சனி பகவானின் ஆசிர்வாதம்: கிச்சடி உணவின் ஆன்மீக முக்கியத்துவம்!

இந்தியா5 மணி நேரங்கள் ago

ஐபோன் விலையில் அதிரடி குறைப்பு!

வேலைவாய்ப்பு6 மணி நேரங்கள் ago

ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

செய்திகள்6 மணி நேரங்கள் ago

BSNL-க்கு மாறி வருகிறார்கள்: ஜியோ, ஏர்டெல் கவலை!

சினிமா6 மணி நேரங்கள் ago

ராயன் படத்தின் முதல் நாள் வசூல் கலக்கு! ரூ.12 கோடிக்கும் மேல்!

வேலைவாய்ப்பு6 மணி நேரங்கள் ago

ரூ.35,000/- சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்6 மணி நேரங்கள் ago

வேப்பிலை முதல் துளசி வரை: இயற்கையின் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டு மருந்துகள்!

பல்சுவை5 நாட்கள் ago

“கேரளா ஸ்டைல் கடலை கறி: சுவையான மற்றும் சத்தான குழம்பு”!

வணிகம்4 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் குறையும் தங்கம் விலை (23/07/2024)!

வணிகம்3 நாட்கள் ago

திடீர் எனச் சரிந்து வரும் தங்கம் விலை (24/07/2024)!

வணிகம்7 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலையில் மாற்றமில்லை (21/07/2024)!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

3,789 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்கள்: தமிழ்நாட்டில் அபார வாய்ப்பு!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024-25-இல் ஸ்டார்ட்அப்-களுக்கு அடித்த ஜாக்பாட்!

வணிகம்5 நாட்கள் ago

2024 பட்ஜெட்: விலை குறையும், அதிகரிக்கும் பொருட்கள்

வணிகம்6 நாட்கள் ago

தினமும் 14 மணிநேர வேலைக்கு அனுமதி கேட்கும் ஐடி நிறுவனங்கள்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஊழியர்கள்!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024: உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? புதிய திட்டம் – என்.பி.எஸ். வாத்ஸல்யா

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!