Connect with us

உலகம்

50 பயணிகளை மறந்துவிட்டு சென்ற விமானம்.. 10 நாட்களில் மீண்டும் அதேபோல் ஒரு சம்பவம்!

Published

on

கடத்த 10 நாட்களுக்கு முன் பெங்களூரு விமான நிலையத்தில் 50 பயணிகளை மறந்து விட்டு கோ ஃபர்ஸ்ட் விமானம் ஒன்று சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது அதேபோன்ற ஒரு நிகழ்வு மீண்டும் நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் என்ற நகரில் இருந்து சிங்கப்பூர் கிளம்பிய விமானம் 32 பயணிகளை விட்டுவிட்டு புறப்பட்டது என்பதால் அந்த பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனை அடுத்து ஸ்கூட் ஏர்லைன்ஸ் மன்னிப்பு கேட்டுள்ளது.

அமிர்தசரஸ் என்ற நகரில் உள்ள ஸ்ரீ குரு ராமதாஸ் ஜி சர்வதேச விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் செல்லும் விமானம் ஜனவரி 18ஆம் தேதி அன்று இரவு 7:55 மணிக்கு புறப்பட திட்டமிட்டது, ஆனால் மோசமான மாநிலம் காரணமாக 4 மணிக்கே விமானம் புறப்பட முடிவு செய்தது. இதற்கு இதனை அடுத்து பயணிகள் அனைவருக்கும் மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலம் தகவல் அனுப்பப்பட்டது. 3.45க்கு சரியாக விமானம் கிளம்பும் என்று அந்த குறுந்தகவலில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் விமான பயணிகளுக்கு டிக்கெட் எடுத்துக் கொடுத்த முகவர்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு விமான நேரம் மாற்றம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். ஆனால் ஒரே ஒரு முகவர் மட்டும் அவர் டிக்கெட் எடுத்துக் கொடுத்த பயணிகளுக்கு இந்த தகவலை தெரிவிக்கவில்லை. இதன் காரணமாக அந்த 32 பயணிகளும் விமானம் 7.55 மணிக்கு புறப்படும் என்று நினைத்து தாமதமாக விமான நிலையத்திற்கு வந்தனர். அப்போது அவர்களுடைய விமானம் ஏற்கனவே கிளம்பி விட்டதாக அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து அந்த பயணிகள் விமான நிலையத்திலேயே போராட்ட ம் நடத்தியதை எடுத்து இது குறித்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

விமானம் புறப்படும் நேரம் குறித்து அனைத்து பயணிகளுக்கும் மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலம் முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டது என்றும் மோசமான வானிலை காரணமாகவே இந்த நேரம் மாற்றம் செய்யப்பட்டதாகவும் விமான நேரமாற்றம் குறித்து விமான நிலைய ஆணையத்தின் முன் அனுமதியும் பெறப்பட்டதாகவும் விமான நிலைய அதிகாரி கூறினார்.

ஒரே ஒரு முகவர் செய்த தவறுக்கு காரணமாக 32 பயணிகளும் விமானத்தில் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும் இருப்பினும் ஸ்கூட் நிறுவனம் இதற்காக பயணிகளிடம் மன்னிப்பு கேட்பதோடு அவர்களுக்கு தேவையான உதவிகள் அனைத்தையும் வழங்க முயற்சி செய்து வருகிறோம் என்றும் ஸ்கூட் விமான நிறுவனத்தின் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் மாற்று விமானம் மூலம் 32 பயணிகள் சிங்கப்பூருக்கு அனுப்பப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் 32 பயணிகளுக்கு தகவல் அனுப்பாத முகவர் மீது நடவடிக்கை எடுக்க ஆலோசனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. 50 பயணிகளை பெங்களூரு விமானம் மறந்து விட்டு சென்ற 10 நாட்களில் கிட்டத்தட்ட அதே போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்9 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு18 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா18 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு19 மணி நேரங்கள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்19 மணி நேரங்கள் ago

H-1B விசா: இந்த ஆண்டும் இரண்டாம் சுற்று குலுக்கல்

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொழியும்!

ஆரோக்கியம்19 மணி நேரங்கள் ago

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 9 காரணங்கள்!

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

வணிகம்5 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

வணிகம்5 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

வணிகம்4 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்

வணிகம்3 நாட்கள் ago

ஐடி துறையில் தொடரும் பணி நீக்கம்: 1,30,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இதுவரை பாதிப்பு!