தமிழ்நாடு
ஒரு வழியாக மார்க்கண்டேயன் நதியைக் கடந்த கோதண்டராமர் சிலை!
![Kothandaramar River - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2019/02/Kothandaramar-River.jpg)
தமிழ்நாட்டிலிருந்து கர்நாடகாவிற்குக் கொண்டு செல்லப்பட்டு வரும் பிரம்மாண்ட கோதண்டராமர் சிலை ஒரு வழியாக 5 நாட்களுக்குப் பிறகு மார்க்கண்டேயன் நதியைக் கடந்துள்ளது.
கிருஷ்ணகிரி அருகே உள்ள சூருபரபள்ளி என்ற பகுதிக்கு கடந்த ஃபிப்ரவரி 3-ம் தேதி கொண்டவரப்பட்ட கோதண்டராமர் சிலை மார்க்கண்டேய நதி பாலத்தைக் கடக்க முடியுமா என்று சந்தேகமாக இருந்தது.
மார்க்கண்டேய நதி பாலம் 200 டன் எடை மட்டுமே தாங்கும். ஆனால் சிலை 500 டன். எனவே மார்க்கண்டேய நதியில் புதியதாக மண் சாலை அமைக்கப்பட்டது.
இந்த மண் சாலை உதவியுடன் மார்க்கண்டேயன் நதியை 6 நாட்கள் போராட்டத்திற்குப் பிறகு நதியை கடந்து மேலுமலை என்ற இடத்திற்குச் சிலை கொண்டு செல்லப்பட்டுள்ளது.