இந்தியா
மாணவிகளுக்கு மாதவிடாய் காலங்களில் விடுமுறை.. அதிரடி அறிவிப்பு வெளியிட்ட பல்கலைகழகம்!
![university - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2023/01/university.webp)
மாணவிகளுக்கு மாதவிடாய் காலங்களில் விடுமுறை அளித்து இந்திய பல்கலைக்கழகம் ஒன்று அறிவிப்பு வெளியிட்டதை அடுத்து அந்த பல்கலைக்கழகத்தின் மாணவிகள் தங்கள் நன்றியை தெரிவித்து வருகின்றனர்.
கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் படித்து வரும் மாணவிகளுக்கு மாதவிடாய் காலங்களில் விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக மாணவிகள் தரப்பில் மட்டும் மகளிர் சங்கங்களில் தரப்பில் இருந்து விடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்த கோரிக்கையை பரிசீலனை செய்த கேரள பல்கலைக்கழகம் மாணவிகளுக்கு மாதவிடாய் காரணங்களில் விடுமுறை என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனை அடுத்து மாணவிகளின் நீண்ட கால கோரிக்கை தற்போது நிறைவேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கேரள மாநிலத்தில் உள்ள கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மாணவிகள் மாதவிடாய் காலங்களில் விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை துணைவேந்தர் பரிசீலித்ததாகவும் இதற்கு கல்வி கவுன்சில் அனுமதி அளித்ததை அடுத்து ஒவ்வொரு செமஸ்டரிலும் மாணவிகளின் வருகை பற்றாக்குறை இரண்டு சதவீதம் அனுமதி வழங்க உத்தரவிட்டுள்ளதாக இந்த பல்கலைக்கழகத்தின் இணை பதிவாளர் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து ஒவ்வொரு செமஸ்டர் தேர்வு எழுத 75% வருகை பதிவு இருக்க வேண்டும் என்ற நிலையில் மாணவிகளுக்கு மட்டும் கூடுதலாக இரண்டு சதவீதம் கழித்து 73% வருகைப்பதிவு இருந்தால் போதும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மாதவிடாய் பொருத்தவரை ஒவ்வொரு மாணவிக்கும் ஒவ்வொரு தினம் இருக்கும் என்பதால் ஒரு குறிப்பிட்ட தினத்தில் விடுமுறை அளிக்க முடியாது என்பதால் வருகை பதிவில் சலுகை அளிக்கப்படுவதாக இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து துணைவேந்தரிடம் முறைப்படி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதாகவும் அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு தற்போது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் இணை பதிவாளர் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழகத்தில் பிஎச்டி படிப்பவர்கள் உள்பட அனைத்து பிரிவு மாணவிகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என்றும் இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வரும் என்றும் பல்கலைக்கழக அதிகாரி ஒருவர் கூறினார்.
இந்த நிலையில் பல்கலைக்கழக மாணவிகள் சங்க தலைவர் நமீதா இது குறித்து கூறிய போது ’தங்களுடைய கோரிக்கைகளை பல்கலைக்கழகம் ஆட்சேபனை தெரிவிக்காமல் நிறைவேற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் மாணவிகள் தேர்வு எழுத ஒவ்வொரு செமஸ்டர்ிலும் இனி 73% வருகை பரிதிகள் இருந்தால் போதும் என்றும் இது எங்களுக்கு மிகவும் அவசியமான ஒன்று என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு செமஸ்டரியிலும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான விடுமுறையை மாதவிடாய் விடுமுறையாக வழங்க வேண்டும் என்பது சங்கத்தின் முந்தைய கோரிக்கைகளாக இருந்தாலும் அதை நடைமுறைப்படுத்தியிருந்தால் சில சிக்கல்களை பல்கலைக்கழகம் வெட்டியிருக்கும் என்றும் வருகை பதிவில் 2% கழிக்கப்பட்டது தான் உண்மையான விடுமுறையாக இருக்கும் என்பதால் இதனை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் உள்ள கொச்சி பல்கலைக்கழகம் அமல்படுத்தியுள்ள இந்த உத்தரவை கேரளாவில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். அது மட்டுமின்றி இந்தியாவில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இதனை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.