Connect with us

இந்தியா

ரூ.22,000 கோடி மோசடி செய்த நிறுவனத்திற்கு மீண்டும் ரூ.1,688 கோடி கொடுத்து ஏமாந்த வங்கிகள்!

Published

on

ஏற்கனவே வங்கிகளில் ரூ.22,000 கோடி மோசடி செய்த நிறுவனத்துக்கு மீண்டும் கடன் கொடுத்த வங்கிகள் மீண்டும் ரூ.1,688 ஏமாந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கடந்த சில ஆண்டுகளாக பெரிய நிறுவனங்களுக்கு கோடிக்கணக்கில் வங்கிகள் கடன் கொடுத்து வருகின்றன என்பதும் அந்த கடன்களை திரும்ப செலுத்தாமல் பல நிறுவனங்கள் ஏமாற்றி வருகின்றன என்பதும் தெரிந்ததே.

ஆயிரக்கணக்கான கோடிகளை வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு விஜய் மல்லையா, நீரவ் மோடி உள்ளிட்டோர் நாட்டை விட்டு தப்பி சென்று விட்ட நிலையில் அவர்களிடம் இருந்து பணத்தை எப்படி வசூல் செய்வது என்று புரியாமல் மத்திய அரசு திணறி வருகிறது.

இந்த நிலையில் ஏற்கனவே 22 ஆயிரம் கோடி ஏபிஜி ஷிப்யார்டு என்ற நிறுவனத்தின் உரிமையாளர் கமலேஷ் அகர்வால் என்பவருக்கு கடன் கொடுத்து வங்கிகள் ஏமாந்த நிலையில் தற்போது மீண்டும் ரூ.1,688 கோடி ரூபாய் கடன் பெற்றுவிட்டு மோசடி செய்ததாக கமலேஷ் அகர்வால் மீது வடக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால் ரூ.22,000 கோடி கடன் பெற்று மோசடி செய்ததாக ரிஷி கமலேஷ் அகர்வால் என்பவர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இந்த மோசடி நாட்டிலேயே மிகப்பெரிய மோசடி என்றும் கூறப்பட்டது. இந்த வழக்கே இன்னும் முடியவில்லை.

இந்த நிலையில் தற்போது தவறான தகவல் அளித்து மீண்டும் ரூ.1,688 கோடி நஷ்டம் ஏற்படுத்தியதாக பஞ்சாப் தேசிய வங்கி மற்றும் அதன் தலைமையில் கீழ் செயல்படும் சில வங்கிகள் சிபிஐயிடம் புகார் அளித்துள்ளன. இந்த நிலையில் இந்த புகாரின் அடிப்படையில் கமலேஷ் அகர்வால் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஏற்கனவே கடன் கொடுத்து மோசடி செய்த நிறுவனத்திற்கு எப்படி வங்கிகள் கடன் கொடுத்தன என்ற கேள்வி தற்போது எழுப்பப்பட்டு வரும் நிலையில் இது குறித்து வங்கி அதிகாரிகளுக்கும் தொடர்பு உண்டா? என்பது குறித்து விசாரிக்க எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

சிறிய கடன்களை கொடுத்துவிட்டு அந்த கடனை திரும்ப செலுத்தாத பொதுமக்களை பொதுமக்களிடம் மிரட்டி வசூலிக்கும் வங்கிகள் பெரிய தொழில் அதிபர்களிடம் கோடி கணக்கில் ஏமாந்து வருவது தொடர் கதை ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்3 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்12 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்12 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு13 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா13 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு13 மணி நேரங்கள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்13 மணி நேரங்கள் ago

H-1B விசா: இந்த ஆண்டும் இரண்டாம் சுற்று குலுக்கல்

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொழியும்!

ஆரோக்கியம்13 மணி நேரங்கள் ago

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 9 காரணங்கள்!

வணிகம்5 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

வணிகம்5 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்4 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

ஓய்வு காலத்தில் நிலையான மாத வருமானம் வழங்கும் 5 சிறந்த திட்டங்கள்!

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்