உலகம்
சுற்றுலாவுக்காக கோடிக்கணக்கில் செலவு செய்யும் முதலாளி.. கொடுத்து வைத்த ஊழியர்கள்!
முன்னணி நிறுவனங்களே ஊழியர்களை வேலை நீக்கம் செய்துவரும் நிலையில் இன்சூரன்ஸ் நிறுவனம் ஒன்று தங்கள் ஊழியர்களின் சுற்றுலாவுக்காக கோடிக்கணக்கில் செலவு செய்து வரும் தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கூகுள், மைக்ரோசாப்ட், ஃபேஸ்புக், ட்விட்டர் உள்பட பல முன்னணி நிறுவனங்களே பொருளாதார மந்த நிலை மற்றும் பணவீக்கம் காரணமாக வேலை நீக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் ஊழியர்களின் சம்பளத்தை குறைத்து வருவதாகவும் போனஸ் உள்ளிட்ட சலுகைகளை கட் செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதனால் முன்னணி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களை அதிருப்தியில் இருக்கும் நிலையில் அமெரிக்காவில் உள்ள இன்சூரன்ஸ் நிறுவனத்தை வைத்திருக்கும் மார்க் நீல்ஸ் என்பவர் தனது நிறுவனத்தின் ஊழியர்களுக்காக கோடிக்கணக்கில் செலவு செய்து வருகிறார்.
ஒவ்வொரு ஆண்டும் அவர் தனது ஊழியர்களை இன்பச் சுற்றுலா அழைத்து செல்கிறார் என்றும் அதன் மூலம் அவர் கோடி கணக்கில் செலவு செய்வதாகும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனை அடுத்து உலகின் மிகச்சிறந்த முதலாளி என்று அவர் அழைக்கப்படுகிறார்.
அமெரிக்காவின் முன்னணி இன்சூரன்ஸ் நிறுவனத்தை வகித்திருக்கும் மார்க் நீல்ஸ் ஊழியர்களுடன் சுற்றுலா செல்லும்போது ஆடம்பரமான 5 ஸ்டார் ஹோட்டல்களில் தங்க வைத்து வருகிறார் என்றும் அதற்காக அவர் கோடி கணக்கில் செலவு செய்ததாகவும் கூறப்படுகிறது. இதுவரை அவர் தங்களது ஊழியர்களின் சுற்றுலாவுக்காக மட்டும் சுமார் 4 கோடி ரூபாய் செலவழித்துள்ளார் என்று கூறப்படுகிறது.
சமீபத்தில் ஐஸ்லாந்து நாட்டுக்கு தனது ஊழியர்களை அழைத்துச் சென்றார். அங்கு தங்குவதற்கும், விதவிதமான சாப்பாடுகளுக்கும் அவர் பணத்தை தண்ணீரை போல் செலவு செய்தார். கடந்த ஆண்டு மற்றும் அவர் தனது ஊழியர்களுக்கு சுமார் 61 லட்சம் போனஸ் கொடுத்துள்ளதாக தெரிகிறது.
தனது இன்சூரன்ஸ் நிறுவனம் லாபத்துடன் செயல்பட்டு வருவதாகவும் தங்களது ஊழியர்களை மேலும் ஊக்குவிக்கும் வகையில் இந்த போனஸ் மற்றும் சுற்றுலாவுக்காக செலவு செய்து வருவதாகவும் அவர் கூறினார். எனக்கு நன்றாக லாபத்தை பெற்றுக் கொடுக்கும் ஊழியர்களுக்கு நான் திரும்ப கொடுக்க விரும்புகிறேன் என்றும் அதனால் அவர்கள் இன்னும் ஊக்கத்துடன் பணிபுரிவார்கள் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு வருடமும் ஊழியர்களுக்கு போனசை வாரி வழங்குவதுடன் இன்பச் சுற்றுலாவுக்கும் அழைத்துச் செல்வதால் அந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் கொடுத்து வைத்தவர்கள் என கூறப்பட்டு வருகிறது.