Connect with us

இந்தியா

பங்குச்சந்தையில் ரூ.100 கோடி மோசடி செய்த தம்பதி.. ஏமாந்த பிரபல நடிகர்கள்

Published

on

கேரளாவை சேர்ந்த தம்பதிகள் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்து இரட்டிப்பு வருமானம் தருவதாக பிரபல நடிகர்கள் உள்ளிட்ட பலரிடம் ஏமாற்றி நூறு கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

கேரளாவை சேர்ந்த வர்கீஸ் மற்றும் அவரது மனைவி ஸ்ரீரஞ்சனி ஆகிய இருவர் போலியான நிறுவனம் ஒன்றை நடத்தி அந்த நிறுவனத்தின் மூலம் முதலீட்டாளர்களை கவர்ந்தனர். குறிப்பாக அவர்களது குறி டாக்டர்கள் மற்றும் பிரபல நடிகர்கள்தான் என்பது தெரிய வந்துள்ளது.

சுமார் 100 கோடி ரூபாய் முதலீடு பணத்தை பெற்ற பின்னர் அவர்கள் திடீரென தலைமறைவானதாகவும் தெரிகிறது. முதலீட்டாளர்களின் பணத்தை பங்குச்சந்தையில் முதலீடு செய்யாமல் ஆடம்பர செலவு செய்ததாகவும் கோவா உள்ளிட்ட பல பகுதிகளுக்கு இருவரும் தம்பதி சதவீதமாக செலவு செய்ததாகவும் கூறப்படுகிறது. அது மட்டும் இன்றி சூதாட்டத்திலும் ஈடுபட்டதாக போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் முதலீட்டார்கள் சுமார் 120 பேர் கொடுத்த புகாரின் அடிப்படையில் தம்பதிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் திடீரென வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றனர். இருப்பினும் அவர்கள் கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னால் டெல்லி விமான நிலையத்தில் அவர்கள் தரையிறங்கிய போது கைது செய்யப்பட்டனர். இதனை அடுத்து அவர்கள் கேரளாவுக்கு அழைத்து வரப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

முதல் கட்ட விசாரணையில் பிரபல நடிகர்கள் உள்பட சுமார் 120 பேர்களிடம் 100 கோடி ரூபாய் தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் ஒரு சில ஆண்டுகளில் இரட்டிப்பாகும் என்று கவர்ச்சிகரமான திட்டத்தை கூறி முதலீடு பெற்றதாகவும் அந்த பணத்தை ஆடம்பரமாக செலவு செய்ததாகவும் கூறியுள்ளனர். பங்குச்சந்தை பெயரை வைத்து முதலீட்டாளர்களை ஏமாற்றிய இந்த தம்பதி மீது 120 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்3 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்12 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்12 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு13 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா13 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு13 மணி நேரங்கள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்13 மணி நேரங்கள் ago

H-1B விசா: இந்த ஆண்டும் இரண்டாம் சுற்று குலுக்கல்

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொழியும்!

ஆரோக்கியம்13 மணி நேரங்கள் ago

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 9 காரணங்கள்!

வணிகம்5 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

வணிகம்5 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்4 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

ஓய்வு காலத்தில் நிலையான மாத வருமானம் வழங்கும் 5 சிறந்த திட்டங்கள்!

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்