உலகம்
பேட்மிண்டன் விளையாடி கொண்டிருந்த வீரருக்கு திடீர் மாரடைப்பு: மைதானத்திலேயே பலி!
பேட்மிண்டன் விளையாடி கொண்டிருந்த வீரர் ஒருவர் திடீரென மைதானத்தில் சுருண்டு விழுந்து பலியான சம்பவத்தின் வீடியோ இணையதளங்களில் வைரலாக வருகின்றன.
கடந்த சில நாட்களாக விழாவில் கலந்து கொண்டவர்கள், திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் உள்பட பலர் திடீர் திடீரென மாரடைப்பு காரணமாக சுருண்டு விழுந்து மரணம் அடைந்து வருவது குறித்த வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன. அதேபோல் விளையாட்டு வீரர்களும் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் போதும், உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்துள்ளனர்.
அந்த வகையில் ஓமன் நாட்டிலுள்ள மஸ்கட் என்ற இடத்தில் பேட்மிண்டன் விளையாட்டு போட்டி ஒன்று சுறுசுறுப்பாக நடைபெற்று வந்தது. அதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பேட்மிண்டன் வீரர் ஒருவர் ஆர்வமாக விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென சரிந்து விழுந்தார். இதனையடுத்து அவர் உடனடியாக அவரை பரிசோதனை செய்த போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் இதனையடுத்து அவர் மரணமடைந்து விட்டதாகவும் தெரிவித்தனர்.
अचानक मौत का ट्रेंड सिर्फ़ भारत में ही नहीं है।
मस्कट में एक भारतीय मूल के व्यक्ति की कोर्ट में खेलते हुए हार्ट अटैक से मौत pic.twitter.com/m2FWaqM8bi— Narendra nath mishra (@iamnarendranath) January 9, 2023
பேட்மிட்டன் விளையாடிக்கொண்டிருந்த வீரர் ஒருவர் மைதானத்திலேயே சுருண்டு விழுந்து பலியான வீடியோவை நமித் மிஸ்ரா என்ற பத்திரிகையாளர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த டுவீட்டுக்கு ஏராளமான இரங்கல் செய்திகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
பலியான விளையாட்டு வீரர் மைதானத்திற்கு விளையாட வரும் போது மிகவும் ஆர்வத்துடனும் சுறுசுறுப்பாகவும் வந்ததாகவும் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெறுவதை அவர் நோக்கமாகக் கொண்டு இருந்ததாகவும் அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.
பேட்மிண்டன் ஆட்டத்தின் நடுவில் திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது எதிர்பாராதது மற்றும் துரதிஷ்டமானது என்றும் அவருக்கு நேர்ந்த முடிவு தங்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாகவும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
முறையான உடற்பயிற்சி இல்லாதது, ஆரோக்க்கியமற்ற உணவு வகை மற்றும் சுற்றுச்சூழல் காரணமாகத்தான் பல்வேறு புதுப்புது நோய்கள் உண்டாகின்றன என்றும் சிறு வயதில் உள்ளவர்களுக்கும் மாரடைப்பு வருவது சர்வ சாதாரணமாக நடந்து வரும் நிலையில் இது குறித்து விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.