Connect with us

உலகம்

திருமணமாகாமல் குழந்தைகள் பெற்ற ரொனோல்டா சவுதியில் வாழ முடியுமா? சட்டம் என்ன சொல்கிறது?

Published

on

உலகப் புகழ்பெற்ற ரொனோல்டா தற்போது சவுதி அரேபிய அணியில் விளையாட இருக்கும் நிலையில் சவுதி அரேபியாவில் திருமணம் செய்யாத தம்பதிகள் ஒன்றாக ஒரே அறையில் தங்க சட்டம் இடம் தராது என்பதால் அவர் என்ன செய்யப் போகிறார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

உலகின் முன்னணி கால்பந்து வீரர்களில் ஒருவரான ரொனால்டோ கடந்த வாரம் சவுதி அரேபியாவில் உள்ள அல் நாசர் என்ற அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். அவருக்கு இந்திய மதிப்பில் 1700 கோடி ரூபாய் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சவுதி அரேபிய அணிக்காக அவர் தொடர்ச்சியாக இரண்டரை ஆண்டுகாலம் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சவுதி அரேபியாவின் சட்டப்படி திருமணம் செய்யாத ஆணும் பெண்ணும் ஒரே அறையில் தங்க அனுமதி இல்லை. ஆனால் ரொனால்டோ தனது காதலி ஜார்ஜினாவுடன் திருமணம் செய்யாமல் உறவில் இருக்கிறார் என்பதும் இந்த ஜோடிக்கு இரட்டை பெண் குழந்தை உள்பட 3 குழந்தைகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சவுதி அரேபியாவில் அவர் தனது காதலி மற்றும் குழந்தையுடன் தங்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் இது குறித்து சவுதி அரேபியா அரசு அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். சவுதி அரேபியாவின் சட்டம் சவுதி அரேபியா குடிமக்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் ரொனால்டோ வெளிநாட்டு வீரர் என்பதால் அவருக்கு இந்த சட்டம் பொருந்தாது என்றும் ஆனால் அதே நேரத்தில் ஏதேனும் குற்றச்செயல் வந்தால் மட்டுமே சவுதி அரேபியாவின் சட்டப்படி அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். எனவே இப்போதைக்கு அவர் தனது காதலி மற்றும் குழந்தைகளுடன் ஒரே வீட்டில் தங்கியிருப்பதற்கு எந்தவிதமான பிரச்சனையும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ரொனோல்டாவை எதிர்த்து சவுதி அரேபியாவில் உள்ள எவரும் வழக்கு தொடரப் போவதில்லை என்றும் அந்த அளவுக்கு அவரை அனைவரும் விரும்புகிறார்கள் என்றும் அவர் தங்கள் நாட்டிற்காக விளையாட வந்துள்ளார் என்ற பெருமை ஒவ்வொரு சவுதி அரேபிய குடிமகனுக்கும் உள்ளது என்றும் கூறியுள்ளார். எங்கள் நாட்டிற்காக ஏராளமான வெற்றியை இந்த இரண்டரை ஆண்டுகளில் அவர் பெற்றுத் தருவார் என்பதால் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து எங்களுக்கு கவலை இல்லை என்று ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்3 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்13 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்13 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு13 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா13 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு13 மணி நேரங்கள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்13 மணி நேரங்கள் ago

H-1B விசா: இந்த ஆண்டும் இரண்டாம் சுற்று குலுக்கல்

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொழியும்!

ஆரோக்கியம்13 மணி நேரங்கள் ago

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 9 காரணங்கள்!

வணிகம்5 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

வணிகம்5 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

வணிகம்4 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

ஓய்வு காலத்தில் நிலையான மாத வருமானம் வழங்கும் 5 சிறந்த திட்டங்கள்!

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்