Connect with us

இந்தியா

இந்தியாவில் திருமணமாகாமல், தனியாக வாழ்வதை விரும்பும் 81% பெண்கள்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

Published

on

திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்றும் திருமணம் என்பது புனிதமானது என்றும் காலங்காலமாக இந்தியாவில் கூறப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே. குறிப்பாக பெண் குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்கள் காலத்தில் பெண்களுக்கு திருமணம் செய்வதை ஒரு கடமையாகவே கருதி வருகின்றனர் என்பதும் பெண் குழந்தைகளை 18 முதல் 22 வயதுக்குள் பெரும்பாலான பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்க விரும்பி வருகின்றனர் என்பதும் குறிப்பிடதக்கது.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பெண்களுக்கு திருமணத்தின் மீதான பற்று குறைந்து வருவதாக கூறப்பட்டு வருகிறது. சமிபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வில் 81% பெண்கள் திருமணமாகாமல் தனித்து இருப்பதை விரும்புவதாக கூறி இருப்பது ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பெண்கள் தற்போது நல்ல கல்வி அறிவு பெற்று நல்ல வேலையில் இருப்பதால் பொருளாதார ரீதியில் யாரையும் நம்பி இருக்க வேண்டிய சூழ்நிலை அவர்களுக்கு இல்லை. எனவே அவர்கள் திருமணம் என்ற பந்தத்தில் சிக்கி ஒருவருக்கு கீழ் வாழ்வதை விரும்பாமல் தனித்து இருப்பதே அல்லது தங்களுக்கு விருப்பமான துணைவர் கிடைக்கும் வரை காத்திருக்க விரும்புகின்றனர் என்பது தான் அந்த ஆய்வின் முடிவாக உள்ளது.

உன்னில் சரிபாதியை நீ எப்போது தேட போகிறாய்? என்று பெற்றோர் கேட்கும் கேள்விக்கு பல பெண்கள் நானே முழுமையாக தான் இருக்கிறேன், என்னில் பாதி எல்லாம் கிடையாது என்று பதில் அளிக்கும் அளவுக்கு பெண்களுக்கு தற்போது மெச்சூரிட்டி அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

பெரும்பாலான பெண்கள் டேட்டிங் செய்வதை விரும்புகின்றனர் என்றும் ஒருவரை பிடித்து அவர் நமக்கு சரிப்பட்டு வருவார் என்று தெரிந்தால் மட்டுமே திருமணம் என்ற பந்தத்தில் நுழைய விரும்புகின்றனர் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

எனவே வருங்காலத்தில் பெற்றோர்களால் நிச்சயிக்கப்படும் திருமணம் என்பது குறைந்து, பெண்கள் தாங்களாகவே தங்களுக்கேற்ற துணையைத் தேடிக் கொள்ளும் முறைதான் அதிகம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. கல்வி மற்றும் பொருளாதாரத்தில் முன்னேறிய பெண்கள் பெரும்பாலும் திருமண பந்தத்தில் நுழையாமல் தனித்து இருக்கவே விரும்புவதாக கூறப்பட்டிருக்கும் ஆய்வு முடிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

author avatar
seithichurul
தமிழ்நாடு5 நிமிடங்கள் ago

ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியால் போக்குவரத்து மாற்றம்!

வேலைவாய்ப்பு18 நிமிடங்கள் ago

அரசு வேலைக்கு தட்டச்சு பயிற்சி அவசியம்: தேர்வர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஆன்மீகம்33 நிமிடங்கள் ago

சனி பகவானின் ஆசிர்வாதம்: கிச்சடி உணவின் ஆன்மீக முக்கியத்துவம்!

இந்தியா2 மணி நேரங்கள் ago

ஐபோன் விலையில் அதிரடி குறைப்பு!

வேலைவாய்ப்பு2 மணி நேரங்கள் ago

ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

செய்திகள்2 மணி நேரங்கள் ago

BSNL-க்கு மாறி வருகிறார்கள்: ஜியோ, ஏர்டெல் கவலை!

சினிமா3 மணி நேரங்கள் ago

ராயன் படத்தின் முதல் நாள் வசூல் கலக்கு! ரூ.12 கோடிக்கும் மேல்!

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

ரூ.35,000/- சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

வேப்பிலை முதல் துளசி வரை: இயற்கையின் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டு மருந்துகள்!

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

ரூ.35,000/- சம்பளத்தில் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

பல்சுவை5 நாட்கள் ago

“கேரளா ஸ்டைல் கடலை கறி: சுவையான மற்றும் சத்தான குழம்பு”!

வணிகம்4 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் குறையும் தங்கம் விலை (23/07/2024)!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

3,789 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்கள்: தமிழ்நாட்டில் அபார வாய்ப்பு!

வணிகம்3 நாட்கள் ago

திடீர் எனச் சரிந்து வரும் தங்கம் விலை (24/07/2024)!

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலையில் மாற்றமில்லை (21/07/2024)!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024-25-இல் ஸ்டார்ட்அப்-களுக்கு அடித்த ஜாக்பாட்!

வணிகம்4 நாட்கள் ago

2024 பட்ஜெட்: விலை குறையும், அதிகரிக்கும் பொருட்கள்

வணிகம்6 நாட்கள் ago

தினமும் 14 மணிநேர வேலைக்கு அனுமதி கேட்கும் ஐடி நிறுவனங்கள்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஊழியர்கள்!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024: உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? புதிய திட்டம் – என்.பி.எஸ். வாத்ஸல்யா

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!