Connect with us

இந்தியா

5 மடங்கு உயர்த்தப்பட்ட கட்டணம்.. திருப்பதி செல்லும் பக்தர்கள் அதிர்ச்சி!

Published

on

திருப்பதியில் பக்தர்கள் தங்கும் அறையின் வாடகை கட்டணம் 2 மடங்கு முதல் 5 மடங்கு வரை உயர்த்தப்பட்டுள்ளதால் பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்தியாவிலேயே அதிக பக்தர்கள் வருகை தரும் கோவில்களில் ஒன்று திருப்பதி ஏழுமலையான் கோவில் என்பதும் இங்கு தினமும் கோடிக்கணக்கில் உண்டியல் வருமானம் மட்டும் வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் பல்வேறு வசதிகளை செய்து கொடுத்துள்ளது என்பதும் இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் கொடுக்கும் காணிக்கைகளை கணக்கில் கொண்டு ஏராளமான வசதிகள் குறிப்பாக அன்னதானம் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திடீரென பக்தர்கள் தங்கும் அறையின் வாடகையை திருமலை திருப்பதி தேவஸ்தானம் 2 மடங்கு முதல் 7 மடங்கு வரை உயர்த்தி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கெளஸ்தபம், நந்தகம், பாஞ்சஜன்யம், வகுளமாதா ஆகிய 4 தங்கும் அறைகள் கொண்ட வளாகத்தில் ஒரு அறைக்கு ரூபாய் 500 முதல் 600 வரை கட்டணமாக பெறப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.1000 என உயர்த்தப்பட்டுள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

அதேபோல் நாராயணகிரி தங்கும் விடுதிகளில் அறை வாடகை 150 என இருந்த நிலையில் ஜனவரி 1 முதல் ரூ.600 ஆக உயர்த்தப்பட்டுள்ளது பக்தர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் நாராயணகிரி எண் 4ல் உள்ள அறைகளுக்கான வாடகை இதுவரை ரூ.750 என்ற இருந்த நிலையில் அது ரூ.1700 என உயர்த்தப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. நாராயணகிரி விடுதியின் சிறப்பு அறை ஒன்றை வாடகை ரூ.750 என இருந்த நிலையில் அது தற்போது ஜிஎஸ்டி உள்பட ரூ.2200 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது என்பதும் சிறப்பு வகை வீடுகளின் வாடகை ரு.2800 என உயர்த்தப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேபோல் ஏழை எளிய மக்கள் தங்கும் எஸ்.என்.சி, ஏ.என்.சி ஏ.எஸ்.சி. எஸ்.இ.சி போன்றா வகை விடுதிகள் இதுவரை வாடகையாக ரூபாய் 50 மட்டும் பெற்று வந்த நிலையில் இவ்விடுதிகளில் வாடகை ரூபாய் 100 என உயர்த்தப்பட்டுள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருப்பதியில் உள்ள அனைத்து வாடகை வீடுகளின் கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டு உள்ளதால் திருப்பதி செல்லும் பக்தர்களின் செலவு இரட்டிப்பாகும் என்பது உறுதியாகியுள்ளது. கோடிக்கணக்கில் வருமானம் வரும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சாதாரண பக்தர்களீன் வாடகை கட்டணத்தை உயர்த்தியது ஏன் என்ற கேள்வி தற்போது பக்தர்கள் மனதில் எழுந்துள்ளது.

திருப்பதிக்கு வரும் வருமானத்தை கணக்கில் கொண்டால் பக்தர்களுக்கு இலவசமாகவே தங்கும் அறைகள் கொடுக்கலாம் என்றும் அல்லது குறைந்த வாடகைக்கு அறை கொடுக்கலாம் என்றும் பக்தர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி அலிபிரி வாகன சோதனை சாவடிகளிலும் வாகன கட்டணம் உயர்த்தப்பட்டது என்பதும் திருப்பதி-திருமலை இடையே இயக்கப்படும் தேவஸ்தான பேருந்து கட்டணம், லட்டு வடை பிரசாதம் விலையும் சமீபத்தில் உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது தங்கும் அறைகளின் கட்டணத்தையும் உயர்த்தியதற்கு பக்தர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து பாஜக முக்கிய பிரமுகர் ஒருவர் கூறியபோது ‘பக்தர்களுக்கு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன என்பது உண்மைதான் என்றாலும் தங்கும் அறை வாடகையை பல மடங்கு உயர்த்துவது நியாயமில்லை என்றும் ஓரளவு மட்டும் வாடகை உயர்த்தலாம் என்றும் தெரிவித்துள்ளார். தங்கும் விடுதிகளின் வாடகை மூன்று முதல் ஐந்து மடங்கு வரை உயர்த்தப்பட்டுள்ளதாகவும், இதை பணக்கார பக்தர்கள் கண்டு கொள்ளவில்லை என்றாலும் சாதாரண ஏழை எளிய பக்தர்களுக்கு பெரும் சுமையாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பக்தர்கள் மீது சுமத்தப்படும் இந்த சுமை குறித்து தேவஸ்தானம் கண்டுகொள்ளவில்லை என்றும் வாடகை ஏற்றுவதற்கு முன் பக்தர்கள் மற்றும் அரசியல் கட்சிகளுடன் கலந்து ஆலோசிக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். சாமானிய பக்தர்களின் சிரமத்தை கணக்கில்கொண்டு திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறை வாடகை கட்டணத்தை குறைக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்1 மணி நேரம் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்11 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்11 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு11 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா11 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு11 மணி நேரங்கள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்11 மணி நேரங்கள் ago

H-1B விசா: இந்த ஆண்டும் இரண்டாம் சுற்று குலுக்கல்

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொழியும்!

ஆரோக்கியம்12 மணி நேரங்கள் ago

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 9 காரணங்கள்!

வணிகம்5 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

வணிகம்4 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்4 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

ஓய்வு காலத்தில் நிலையான மாத வருமானம் வழங்கும் 5 சிறந்த திட்டங்கள்!

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்