வேலைவாய்ப்பு
தமிழக அரசின் சுகாதாத்துறையில் செவிலியர்களுக்கான வேலை! உடனே விண்ணப்பியுங்கள்!
தமிழக அரசின் சுகாதாரத்துறையில் காலியிடங்கள் 520 உள்ளது. செவிலியர் பணியிடங்களை ஒப்பந்தம் மற்றும் ஒருங்கிணைந்த சம்பள அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பை மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.
வேலை: செவிலியர் (Nurse)
மொத்த காலியிடங்கள்: 520
கல்வித்தகுதி: செவிலியர் துறையில் பட்டயம் அல்லது பட்டம் பெற்ற பெண்கள் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். மேலும் தமிழ்நாடு செவிலியர் மற்றும் குடும்ப நலத்துறை கவுன்சில் நிரந்த பதிவு செய்திருக்க வேண்டும்.
வயது: 01.07.2019 தேதியின்படி 18 முதல் 57 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.350ம், மற்ற அனைத்துப் பிரிவினரும் ரூ.700 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.mrb.tn.gov என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழு விவரங்கள் அறிய http://www.mrb.tn.gov.in/pdf/2019/Nurses_SNCU_Notification_06022019.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 26.02.2019