உலகம்
இளவரசி டயானா சாகவில்லை, ரகசிய அறையில் ஒளிந்து வாழ்கிறார்.. அதிர்ச்சி தகவல் கூறிய மகன் ஹாரி
இங்கிலாந்து இளவரசி டயானா கடந்த 1997ம் ஆண்டு சாலை விபத்தில் மரணமடைந்த நிலையில் தனது தாயார் சாகவில்லை என்றும் ரகசிய அறையில் ஒளிந்து வாழ்கிறார் என்றும் அவரது மகன் ஹாரி எழுதிய புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் என்பவரை கடந்த 1981ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். சார்லஸ் – டயானா திருமணம் ஆனதிலிருந்து பல சர்ச்சைக்குரிய சம்பவங்கள் நடந்தது என்பதும் டயானா அவ்வப்போது அளித்த பேட்டிகள் அரச குடும்பத்தை தர்மசங்கடத்திற்கு ஆளாக்கியது என்பதும் தெரிந்ததே.
அதுமட்டுமின்றி உலகிலேயே பத்திரிகையாளர்களால் அதிகம் விரட்டப்பட்டவர் டயானா என்றும் அவர் எங்கு சென்றாலும் அவர் பின்னால் ஒரு பெரிய பத்திரிகை கூட்டம் செல்லும் என்பதால் அவருக்கு தனிமை என்பதே இல்லாமல் இருந்ததாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 1997 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி அவர் தனது காரில் சென்று கொண்டிருக்கும் போது பத்திரிக்கையாளர்கள் அவரைப் பின்தொடர்ந்து விரட்டிக் கொண்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட எதிர்பாராத விபத்தில் டயானா மரணம் அடைந்தார். அவரது மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் டயானாவின் மகன் இளவரசர் ஹாரி எழுதிய புத்தகம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த புத்தகம் குறித்து அவ்வப்போது பேட்டி அளித்து வருகிறார். அந்த பேட்டியில் அவர் தனது தாயார் சாகவில்லை என்றும் அவர் தலைமறைவாகி இருக்கிறார் என்றும் அவர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டயானா பாரிஸ் நகரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பை வாங்கி இருக்கிறார் என்றும் வங்கு தான் அவர் வாழ்ந்து வருவதாக நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி ஸ்விஸ் நாட்டில் உள்ள ஆல்ப்ஸ் மலையில் ஒரு ரகசிய அறையில் அவர் தொடர்ந்து வாழ்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் தன்னுடைய ஏதாவது ஒரு பிறந்தநாளுக்கு மீண்டும் அவர் வருவார் என்று தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
டயானா சாகவில்லை என்றும் அவர் உயிரோடு இருக்கிறார் என்றும் அவர் வேண்டுமென்றே பொய்யான ஒரு மரணத்தை ஏற்படுத்தி விட்டு தலைமறைவாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றும் ஹாரி தனது புத்தகத்தில் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் டயானா இறந்தது உண்மைதான் என்றும் ஹாரியின் புத்தகத்தில் உள்ள தகவலுக்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை என்றும் அரச குடும்பத்தின் தரப்பில் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. டயானா இறந்து 25 ஆண்டுகள் ஆன பின்னரும் அவரது மரணம் குறித்த சர்ச்சை இன்னும் தொடர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.