இந்தியா
கர்நாடகாவுக்கு அதிக தொற்றுள்ள நாடுகளில் வரும் பயணிகள் 7 நாட்கள் தனிமைப்படுத்த உத்தரவு!
சீனா, ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட அதிக கொரோனா பாதிப்பு பரவல் உள்ள நாடுகளிலிருந்து கர்நாடகா வரும் பயணிகள் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனா, ஹாங்காங், ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்திலிருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா அறிகுறிகள் இருக்கும் போது அவர்கள் உடனடியாக தனிமைப்படுத்தப்படுவார்கள் என கர்நாடக சுகாதார அமைச்சர் டாக்டர் கே சுதாகர் சனிக்கிழமை தெரிவித்தார்.
சென்னை விமான நிலையத்திலும் வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா அறிகுறிகள் இருக்கும் போது கோரோனா தொற்று பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.