Connect with us

உலகம்

கடன் காரர்களிடம் இருந்து தப்பிக்க இறந்தது போல் போலி புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவு செய்த பெண்

Published

on

கடன் வாங்கியவர்கள் கடனை திருப்பிக் கொடுக்காமல் சமாளிக்க பல்வேறு தந்திரங்களை செய்து வருவார்கள் என்பது தெரிந்ததே. ஆனால் இந்தோனேசியாவை சேர்ந்த பெண் ஒருவர் கடன்காரர்களிடம் இருந்து தப்பிக்க தான் இறந்து போனதாக பேஸ்புக்கில் புகைப்படத்தை பதிவு செய்து ஏமாற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தோனேசியாவை சேர்ந்த லிசா தேவி பிரமிதா என்ற பெண் பலரிடம் கடன் வாங்கிவிட்டு அந்த கடனை திருப்பி செலுத்த முடியாமல் தவிர்த்துள்ளார். இதனை அடுத்து கடன்காரர்கள் தங்கள் பணத்தை கொடுக்குமாறு நெருக்கடி கொடுக்க அவர் சிறிது காலம் அனைவரிடமும் அவகாசம் கேட்டுள்ளார்.

அதன்பிறகு லிசா தேவி பிரமிதா தனது மகளின் உதவியுடன் தான் இறந்து விட்டதாக பேஸ்புக்கில் புகைப்படத்தை பதிவு செய்தார். இந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பார்த்த அவருக்கு கடன் கொடுத்தவர்கள் அதிர்ச்சி அடைந்து லிசா தேவி பிரமிதா இறந்து விட்டதால் தான் தங்களது பணம் முழுவதும் இழந்து விட்டதாக அவர்கள் நினைத்தனர்.

இந்த நிலையில் அந்த பெண்ணுக்கு 22 ஆயிரம் கடன் கொடுத்த குணவன் என்பவர் அவரது மகளிடம் தாயின் மரணம் குறித்து விசாரித்துள்ளார். அப்போது தனது தாயின் உடல் நெடுந்தொலைவில் உள்ள சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். டிசம்பர் 11-ஆம் தேதி அவர் இறந்து விட்டதாகவும் அவரது புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவு செய்திருப்பதாகவும் அவரது மகள் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் அந்த பெண்ணின் இறப்பில் சந்தேகம் அடைந்த கடன் கொடுத்த குணவன் அவரது முகநூல் தொடர்ச்சியாக பார்த்து வந்த போது அவரது பிணம் குறித்த புகைப்படம் போட்டோஷாப் மூலம் பதிவு செய்யப்பட்ட போலியான புகைப்படம் என்பதை கண்டுபிடித்தார். அதே போன்ற சில புகைப்படங்கள் இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டவை என்றும், அதில் லிசா தேவி பிரமிதா முகத்தை மட்டும் மாற்றி பிணம் போல் இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டது என்பதையும் அவர் கண்டுபிடித்தார்.

இதனை அடுத்து லிசா தேவி பிரமிதா மகளை கடன் கொடுத்தவன் மிரட்டிய நிலையில் அந்த சிறுமி தனது தாய் சாகவில்லை என்றும் தலைமறைவாக உள்ளார் என்று ஒப்புக்கொண்டார். இப்போது கடன் கொடுத்தவர்கள் அந்த பெண்ணை மீண்டும் தேடி வருகின்றனர். கடன்காரர்களிடம் இருந்து தப்பிக்க தான் இறந்துவிட்டதாக புகைப்படத்தை பதிவு செய்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

author avatar
seithichurul
வணிகம்1 நாள் ago

இன்று புதிய உச்சத்தை தொட்ட தங்கம், வெள்ளி விலை!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்1 நாள் ago

இன்றைய ராசிபலன் (19/10/2024)

செய்திகள்2 நாட்கள் ago

ஆளுநர் ரவி தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘திராவிடம்’ நீக்கம் – முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்!

வேலைவாய்ப்பு2 நாட்கள் ago

ஒரே நாளில் 45,000 வேலைவாய்ப்புகள்! – தமிழக அரசின் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்கள்!

ஜோதிடம்2 நாட்கள் ago

குரு வக்ர பெயர்ச்சி: நற்பலன் பெறும் ராசிகள் யாவர்?

செய்திகள்2 நாட்கள் ago

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு!

செய்திகள்2 நாட்கள் ago

இந்தி மொழி திணிப்பு இல்லை: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கருத்து!

வணிகம்2 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு(18-10-2024)!

ஜோதிடம்2 நாட்கள் ago

500 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம் – இந்த 3 ராசிக்காரர்களுக்கு செல்வம் குவியவிருக்கிறது!

ஆன்மீகம்2 நாட்கள் ago

தமிழ்: இவருக்கு பொன்னான மனசுப்பா! ராகு கருணை மழையாய் கொட்டுகிறார்.. அனுபவிக்கும் அதிர்ஷ்ட ராசிகள்!

வணிகம்4 நாட்கள் ago

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ரூ.360 வரை உயர்வு!

வணிகம்4 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(16-10-2024)

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

TNPSC குரூப் 5A வேலைவாய்ப்பு அறிவிப்பு – விண்ணப்பிக்கலாம்! முழு விவரங்கள் உள்ளே!

வணிகம்3 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் உயரும் தங்கம் விலை!(17-10-2024)

தமிழ்நாடு4 நாட்கள் ago

சென்னை மழைப் பேரிடரில் பாதிக்கப்பட்டோருக்கு முதல்வர் ஸ்டாலின் இலவச உணவு அறிவிப்பு!

சினிமா3 நாட்கள் ago

இயக்குனராக அவதாரம் எடுக்கும் யுவன் சங்கர் ராஜா!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – அக்டோபர் 15, 2024

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

ரூ.42,500/- சம்பளத்தில் BHEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (16/10/2024)

ஆன்மீகம்3 நாட்கள் ago

குரு சாட்டையை எடுத்துவிட்டார்: அக்டோபர் முதல் தங்கத்தில் அடி விழும் ராசிகள்! மகிழ்ச்சியின் திருப்பம்!