இந்தியா
மொபைல் போன் திருடனை ரயிலில் இருந்து தூக்கி எறிந்த பயணிகள்: அதிர்ச்சி சம்பவம்
ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த பெண் பயணி ஒருவரின் மொபைல் போனை திருடிய திருடனை அங்கிருந்த பயணிகள் சிலர் ரயிலில் ஓடும் ரயிலில் இருந்து தூக்கி எறிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் இருந்து அயோத்தி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்றில் பெண் பயணி ஒருவர் பயணம் செய்து கொண்டிருந்த போது அவரது மொபைல் போனை ஒரு இளைஞர் திருடியதாக தெரிகிறது.
உடனே அந்த பெண் சத்தம் விட்டதை அடுத்து அங்கிருந்த பயணிகள் அந்த திருடனை பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். இதனை அடுத்து ஆவேசமான ஒரு இளைஞர் தொடர்ந்து அந்த திருடனை அடித்துக் கொண்டிருந்தது மட்டுமின்றி ரயிலில் இருந்து அந்த நபரை தூக்கி வெளியே வீசினார்.
அப்போது அவர் வெளியே இருந்த ரயில் நிலையத்தின் கம்பியில் திருடனின் தலை பட்டதால் ஆழமான காயம் ஏற்பட்டதை அடுத்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகியதை அடுத்து அந்த வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் ரயிலிலிருந்து திருடனை தூக்கி எறிந்த இளைஞரை கைது செய்து அவர் மீது ஐபிசி 302 என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும் கொலையான திருடன் யார் என்பது குறித்து இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என தெரிகிறது.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்த பயணி ஒருவர் கூறியபோது திருடிய மொபைல் போனை அந்த திருடன் திருப்பிக் கொடுத்துவிட்டு என்னை உயிரோடு விட்டு விடுமாறு கெஞ்சினார். ஆனாலும் பயணிகள் அந்த திருடனை ஈவு இரக்கமின்றி தொடர்ச்சியாக அடித்துக் கொண்டு இருந்ததாகவும் ரயிலில் இருந்து தூக்கி எறிந்ததாகவும் கூறியுள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
#शर्मनाक…..????
ट्रेन में मोबाइल चोरी के आरोप में यात्रियों नें युवक की जमकर की पिटाई। पिटाई के बाद शाहजहापुर के तिलहर के पास चलती ट्रेन से युवक को फेंका, युवक की हुई मौत। अयोध्या-दिल्ली एक्सप्रेस की जनरल बोगी का है मामला। बरेली जंक्शन जीआरपी ने आरोपी को किया गिरफ्तार। pic.twitter.com/6WLdCfKsoR— NCIB Headquarters (@NCIBHQ) December 19, 2022