கிரிக்கெட்
பெண் தொழிலதிபரை திருமணம் செய்யும் ஷர்துல் தாக்கூர்.. எங்கே? எப்போது?
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பந்துவீச்சாளராக ஷர்துல் தாக்கூர் பெண் தொழில் அதிபரை திருமணம் செய்ய இருக்கும் நிலையில் அவரது திருமணம் நடைபெறும் இடம், தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடி அனைவரும் கவனத்தை கவர்ந்த ஷர்துல் தாக்கூர், தற்போது இந்திய அணியின் முன்னணி ஆல்-ரவுண்டராக இருந்து வருகிறார் என்பதும் அவர் தற்போது வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறார் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் இவர் மகாராஷ்டிராவை சேர்ந்த மித்தாலி பருல்கர் என்ற பெண் தொழிலதிபரை திருமணம் செய்ய உள்ளார். இருவரும் நீண்ட நாட்களாக நண்பர்களாக இருந்து அதன்பின் அந்த நட்பு காதலாக மாறிய நிலையில் தற்போது இருதரப்பு பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்ய உள்ளனர்.
இவர்களது திருமணம் பிப்ரவரி 27ஆம் தேதி மும்பையின் ஒரு முக்கிய பகுதியில் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது/ இந்த அறிவிப்பை மணப்பெண் இத்தாலியை தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ’ஆல் தி பேக்ஸ்’ என்ற நிறுவனத்தை நடத்தி வரும் மித்தாலி பருல்கர் இந்தியாவின் முன்னணி தொழில் அதிபர்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
முதலில் இந்த திருமணத்தை கோவாவில் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் ஆனால் விருந்தினர்களின் வருகை மற்றும் ஒரு சில காரணங்களால் மும்பையின் ஒரு முக்கிய பகுதியில் நடந்தது நடத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திருமணத்தில் 200 முதல் 250 விருந்தினர்கள் வருவார்கள் என்றும் விருந்தினர்களை வரவேற்க பிரமாண்டமான ஏற்பாடு செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. பிப்ரவரி 27ஆம் தேதி திருமணம் நடந்தாலும் பிப்ரவரி 25ஆம் தேதி வரை கிரிக்கெட் போட்டியில் விளையாடும் ஷர்துல் தாக்கூர், போட்டியை முடித்துவிட்டு 26 ஆம் தேதி கிளம்பி, 27ஆம் தேதி தனது திருமணத்தில் கலந்து கொள்வார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்கூர் திருமணம் செய்ய இருப்பதையடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.