இந்தியா
சிபிஎஸ்இ பொதுத்தேர்வு.. ஹால்டிக்கெட் டவுன்லோடு செய்ய கட்டணமா? அதிர்ச்சி தகவல்!
2023ஆம் ஆண்டின் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு வரும் பிப்ரவரி மாதம் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை டவுன்லோட் செய்ய கட்டணம் செலுத்த வேண்டும் என மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு குறுஞ்செய்தி வந்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.
இதுகுறித்து சிபிஎஸ்இ விளக்கமளிக்கையில் சிபிஎஸ்சி இணையதளம் போன்று போலியாக இணையதளத்தை சில விஷமிகள் ஏற்படுத்தி பொதுத்தேர்வு ஹால் டிக்கெட் டவுன்லோட் செய்ய பணம் வசூலித்து வருவதாகவும் அத்தகைய போலி இணையதளங்கள் குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.
இந்தியாவில் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு சிபிஎஸ்சி பொதுத்தேர்வு வரும் பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது. பிப்ரவரி 15 முதல் தொடங்கும் இந்த தேர்வுகள் ஒரே கட்டமாக நடத்தப்படும் என்றும் 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு சிபிஎஸ்சி பொதுத் தேர்வை சுமார் 35 லட்சம் மாணவர்கள் எழுதயிருப்பதாகவும் சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
இந்த நிலையில் சிபிஎஸ்சி பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு விரைவில் ஹால்டிக்கெட் வழங்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில் சிபிஎஸ்சி இணையதளம் போன்றே போலியாக இணையதளங்கள் ஏற்படுத்தப்பட்டு அதன் மூலம் மாணவர்களிடம் பணம் வசூலிக்கப்பட்டு வருவதாக புகார்கள் வந்துள்ளது.
இந்த புகார்கள் குறித்து சிபிஎஸ்சி கூறியபோது, cbse.gov.in என்ற இணைய தளம் மட்டுமே சிபிஎஸ்சி கல்வி வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் ஆகும். ஆனால் ஒரு சிலர் போலியான இணையதளங்களை உருவாக்கி அதன் மூலம் பெற்றோர்கள், பள்ளிகள் மற்றும் மாணவர்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்பி, ஹால் டிக்கெட் டவுன்லோட் செய்ய பணம் செலுத்த வேண்டுமென்று கூறி வருகின்றனர்.
இத்தகைய போலி எஸ்எம்எஸ்கள் மற்றும் இணையதளத்தில் சென்று பணம் செலுத்தி யாரும் ஏமாந்து விட வேண்டாம். சிபிஎஸ்இ ஹால்டிக்கெட் டவுன்லோட் செய்ய எந்த பணமும் வசூலிக்கப்படவில்லை என்பது தான் உண்மை’ என்று தெரிவித்துள்ளது. இந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.