Connect with us

இந்தியா

சிறுநீரகத்தை விற்று தந்தையின் கடனை அடைக்க முயன்ற மாணவி.. லட்சக்கணக்கில் ஏமாந்த சோகம்!

Published

on

தந்தைக்கு தெரியாமல் அவரது வங்கிக்கணக்கில் இருந்து எடுத்த பணத்தை திரும்ப டெபாசிட் செய்வதற்காக சிறுநீரகத்தை விற்க முயன்ற மாணவி ஒருவர் லட்சகணக்கில் சைபர் குற்றவாளிகளிடம் ஏமாந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் குண்டூரில் சேர்ந்த நர்சிங் கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவரிடம் அவரது தந்தை கைச் செலவுக்காக தன்னுடைய டெபிட் கார்டை கொடுத்துள்ளார். அந்த டெபிட் கார்டின் மூலம் மாணவி தந்தையின் வங்கிக் கணக்கிலிருந்து கடிகாரங்கள், ஆடைகள் மற்றும் ஆடம்பர பொருட்களை வாங்கி உள்ளார்.

இதனை அடுத்து தந்தை தனது வங்கி கணக்கை சரி பார்க்கும் முன்னர் அந்த பணத்தை திரும்ப செலுத்திவிட வேண்டும் என்று அவர் திட்டமிட்டார். இதற்காக அவர் தனது சிறுநீரகத்தை விற்று தந்தையின் அக்கவுன்டில் பணம் போட திட்டமிட்டார்.

இதுகுறித்து ஆன்லைனில் ஒரு விளம்பரத்தைப் பார்த்த மாணவி, அந்த விளம்பரத்தில் சிறுநீரகம் தானம் செய்பவர்களுக்கு ரூ 7 கோடி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த விளம்பரத்தில் உள்ள நபரை அவர் தொடர்பு கொண்டபோது டாக்டர் பிரவீன் ராஜ் என்பவர் பேசுவதாகவும் சிறுநீரகம் பொருத்த மாக இருந்தால் ஆரம்ப தொகையாக 3.5 கோடி வழங்கப்படும் என்றும் சிறுநீரகம் பெற்றவுடன் மீதி தொகை வழங்கப்படும் என்றும் கூறப்பட்டதாக தெரிகிறது.

இதனை அடுத்து மாணவி தனது மருத்துவ அறிக்கை உள்பட அனைத்தையும் சமர்ப்பித்த பின்னர் அவர் சிறுநீரகத்தை தானம் செய்யத் தகுதியுடையவர் என்று அவருக்கு தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி சிறுநீரகம் தானம் செய்வதற்கு முன்னர் ஒரு சில முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும் என்றும் அதற்காக 16 லட்ச ரூபாய் அந்த மாணவி கட்ட வேண்டும் என்றும் அவர்கள் தரப்பில் கூறப்பட்டதாக தெரிகிறது.

இதனை அடுத்து மாணவி தனது தந்தையின் வங்கிக் கணக்கிலிருந்து 16 லட்சம் எடுத்துக் கட்டியுள்ளார். அதன்பிறகு அவர் டெல்லிக்குச் சென்று சிறுநீரகத்தை தானத்தை வழங்கி விட்டு பின்னர் பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அவர் கூறியபடி அந்த நர்சிங் மாணவி டெல்லி சென்ற போதுதான் அது ஒரு போலியான முகவரி என்று தெரியவந்தது. இதனை அடுத்து அவர் காவல் துறையை அணுகி தான் 16 லட்ச ரூபாய் ஏமாந்ததை தெரிவித்த நிலையில் காவல்துறையினர் தற்போது அந்த மோசடி நபரை கண்டுபிடிப்பதற்காக வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இதுகுறித்து அவரது தந்தையிடம் கூறப்பட்ட நிலையில் மாணவி தந்தைக்கு பயந்து தலைமறைவாகி விட்டதாகவும் அதன்பின்னர் மாணவி அவருடைய தோழிகளில் ஒருவர் வீட்டில் தங்கியிருந்ததை கண்டுபிடித்து தந்தையிடம் ஒப்படைத்ததாகவும் கூறப்படுகிறது.

author avatar
seithichurul
தினபலன்13 மணி நேரங்கள் ago

இன்றைய (27/09/2024) ராசிபலன்

ஆரோக்கியம்24 மணி நேரங்கள் ago

சாதம் சாப்பிட்டாலும் உடல் எடையை குறைக்கலாம்!

ஆரோக்கியம்24 மணி நேரங்கள் ago

செவ்வாழை: தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுவதன் நன்மைகள்!

ஆன்மீகம்24 மணி நேரங்கள் ago

நவராத்திரி 2024: தேதிகள், சிறப்புகள் மற்றும் விவரங்கள்!

ஆரோக்கியம்24 மணி நேரங்கள் ago

காடை வாங்கினா இப்படி ஒருமுறை வறுவல் செஞ்சு பாருங்க… சுவையாக இருக்கும்!

வணிகம்1 நாள் ago

ஜியோவின் தீபாவளி தமாகா: ஒரு வருட இலவச இணையம், ஆனாலும் ஒரு நிபந்தனை!

ஆரோக்கியம்1 நாள் ago

வெண்டைக்காய் நல்லது, ஆனாலும் இவர்கள் மட்டும் சாப்பிடக்கூடாது!

ஆரோக்கியம்1 நாள் ago

முள்ளங்கியுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள் – எச்சரிக்கையுடன் இருங்கள்!

செய்திகள்1 நாள் ago

தேசிய குடும்ப தினம்: குடும்ப உறவுகளை கொண்டாடும் சிறப்புநாள்!

வேலைவாய்ப்பு1 நாள் ago

ரூ.34,000/- ஊதியத்தில் தமிழக அரசில் தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கான வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.15 லட்சம் சம்பளத்தில் டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு!

சினிமா5 நாட்கள் ago

OTT-யில் அதிரவைக்கும் சைக்கோ திரில்லர்: உண்மை சம்பவத்தை தழுவி வந்த Sector 36!

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்5 நாட்கள் ago

செப்டம்பர் 23 முதல் செப்டம்பர் 29 வரையிலான வார ராசிபலன்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

ஒரு வயது வரை குழந்தைகளுக்கு இந்த உணவுகள் வேண்டாம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

IT துறையில் வேலை தேடுபவரா நீங்கள்? Accenture நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (22-09-2024)

ஆரோக்கியம்5 நாட்கள் ago

படிகாரம்: ஆரோக்கியத்திற்கும் அற்புதமாய் பயன்படும்!

இந்தியா2 நாட்கள் ago

ரூ. 10,000 முதலீடு செய்தால் ரூ. 31 லட்சம் கிடைக்கும்…! அசத்தலான POST OFFICE திட்டம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் HPCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வணிகம்3 நாட்கள் ago

ஏர்டெல்-ன் மூன்று புதிய பிரீபெய்ட் திட்டங்கள் அறிமுகம்!