சினிமா செய்திகள்
இதற்காகத்தான் அவருக்கு ரசிகரா இருக்கோம்.. விஜய் போட்டோவை பார்த்து நெகிழ்ந்த ரசிகர்கள்!
மாற்றுத்திறனாளி ரசிகர் ஒருவரை விஜய் தூக்கிக் கொண்டு சென்ற புகைப்படம் வைரலானதை அடுத்து இந்த மனித நேயத்திற்கு தான் நாங்கள் அவருடைய ரசிகராக இருக்கிறோம் என்று விஜய் ரசிகர்கள் பெருமையுடன் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.
நடிகர் விஜய் இன்று விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்தார் என்பதும் இந்த சந்திப்பின்போது அவர் நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் சந்திப்பு முடிந்ததும் பிரியாணி பரிமாறப்பட்டதாகவும் விஜய்யே ரசிகர்களுக்கு பிரியாணி பரிமாறியதாகவும் கூறப்படுகிறது. மேலும் சந்திப்பு முடிந்ததும் அவர் பல ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
இந்த நிலையில் மாற்றுத்திறனாளி ரசிகர் ஒருவர் விஜய்யை பார்ப்பதற்காக நீண்ட நேரமாக காத்திருப்பதாக தகவல் வெளியானது. உடனே விஜய் ரசிகர் இருக்கும் இடம் சென்று அவரை தூக்கிக் கொண்டு மேடைக்கு வந்து அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
இந்த புகைப்படத்தை விஜய் விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் என்றாகி உள்ளது. அந்த அன்புதான் சார் கடவுள் என்றும், இந்த ஒரு காரணத்திற்காக தான் அவருக்கு நாங்கள் ரசிகர்களாக இருக்கிறோம் என்றும் விஜய் ரசிகர்கள் நெகிழ்ச்சியுடன் கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.
Thalapathy @actorvijay Sir At His Fans Photoshoot Session Earlier Today.@TVMIoffl @Jagadishbliss @RIAZtheboss #Vairsu pic.twitter.com/fulySQ0hvM
— Bussy Anand (@BussyAnand) December 13, 2022