Connect with us

வணிகம்

இந்தியாவில் தினசரி விமான பயணிகள் எண்ணிக்கையில் புதிய சாதனை!

Published

on

இந்தியாவில் கொரோனா தொற்று பரவலுக்குப் பிறகு மீண்டும் விமான பயணிகள் எண்ணிக்கை ‘V’ வடிவில் அதிகரித்துள்ளது என விமான போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் குளிர்கால நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், திமுக மக்களவை உறுப்பினரான தயாநிதி மாறன், விமான நிலையங்களில் அதிக நெரிசல் ஏற்பட்டு வருகிறது. பயணிகளுக்குத் தேவையான வசதிகளும் கட்டுமான திட்டங்களும் சரிவர இல்லை. விமான பயணிகள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். சில நேரங்களில் பயணிகள் விமானங்களைத் தவறவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். சென்னையில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள விமான முனையம் எப்போது திறக்கப்படும் எனக் கேள்விகளை எழுப்பி இருந்தார்.

அந்த கேள்விகளுக்குப் பதில் அளித்த மான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்யா மாதவராவ் சிந்தியா, “இந்தியாவில் கொரோனா தொற்று பரவலுக்கு முன்பாக தினசரி விமான பயணிகளின் எண்ணிக்கை 4.07 லட்சமாக இருந்தது. அதுவே இப்போது புதிய உட்சமாக 4.17 லட்சமாக அதிகரித்துள்ளது

கொரோனாவுக்கு பிறகு மீண்டும் விமானப் பயணம் தொடங்கிய போது, அமெரிக்கா, ஐரோப்பியா உள்ளிட்ட நாடுகளின் விமான நிலையங்களில் மிகப் பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்திய விமான போக்குவரத்துத் துறை அதனைத் திறம்படச் சமாளித்து உள்ளது.

இந்தியாவில் விமான பயணத்தை மேலும் சீராக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது ஏற்பட்டு வரும் விமான டிராஃபிக்கை சரி செய்ய விமான நிலைய ஆப்ரேட்டர்கள், குடியேற்றம், சிஎஸ்ஐஎஃப் அதிகாரிகளுடன் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. விரைவில் தற்போது உள்ள பிரச்சனைகள் சரி செய்யப்படும்.

சென்னை, கொல்கத்தா, ஜபல்பூர், இந்தூர், ராஜ்கோட், விஜயவாடா, ராய்பூர் மற்றும் அம்ரிஸ்டர் உள்ளிட்ட 11 விமான நிலையங்களை 50 ஆண்டுகள் குத்தகைக்கு விரைவில் விடப்பட உள்ளது. அதன் மூலமாக மத்திய அரசுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் நிதி கிடைக்கும்” எனவும் சிந்தியா தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 11-ம் தேதி கோவா மாநிலத்தின் 2வது சர்வதேச விமான நிலையத்தைப் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்க உள்ளார். இதுவரையில் கோவா செல்லும் விமானங்கள் அங்குள்ள ராணுவ விமான நிலையத்தையே பயன்படுத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்11 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்20 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்20 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு21 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா21 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு21 மணி நேரங்கள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்21 மணி நேரங்கள் ago

H-1B விசா: இந்த ஆண்டும் இரண்டாம் சுற்று குலுக்கல்

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொழியும்!

ஆரோக்கியம்21 மணி நேரங்கள் ago

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 9 காரணங்கள்!

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

வணிகம்5 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

வணிகம்5 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

வணிகம்4 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்

வணிகம்3 நாட்கள் ago

ஐடி துறையில் தொடரும் பணி நீக்கம்: 1,30,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இதுவரை பாதிப்பு!