Connect with us

இந்தியா

இன்று முதல் டிஜிட்டல் கரன்ஸி .. எந்தெந்த வங்கிகளில் கிடைக்கும்? எப்படி பயன்படுத்தலாம்?

Published

on

சில்லறை பயன்பாட்டிற்கான டிஜிட்டல் கரன்ஸி இன்று முதல் அமலுக்கு வருகிறது என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இந்தியாவில் டிஜிட்டல் கரன்ஸி அறிமுகம் செய்ய இருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மத்திய அரசு தெரிவித்திருந்த நிலையில் டிசம்பர் 1 முதல் டிஜிட்டல் கரன்ஸி வெளியிடப்போவதாக இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் அறிவித்திருந்தது.

முதல்கட்டமாக மும்பை, டெல்லி, பெங்களூர் மற்றும் புவனேஸ்வர் ஆகிய நான்கு நகரங்களில் டிஜிட்டல் கரன்ஸி அறிமுகப்படுத்தப்பட இருப்பதாகவும் நாட்டில் பணத்தை நிர்வகிப்பதற்கான பெரும் செலவை குறைக்கும் நோக்கத்தில் இந்த டிஜிட்டல் கரன்ஸி வெளியிடப்படும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

டெல்லி, மும்பை, பெங்களூர் மற்றும் புவனேஸ்வர் ஆகிய நான்கு நகரங்களில் உள்ள ஸ்டேட் பாங்க், ஐசிஐசிஐ வங்கி, யெஸ் வங்கி, ஐ.டி.எப்.சி வங்கி ஆகிய வங்கிகளில் முதல் கட்டமாக டிஜிட்டல் கரன்சி வெளியிடப்படுவதாகவும், யூனியன் பாங்க் ஆப் இந்தியா, ஹெச்.டி.எப்.சி வங்கி, கோட்டாக் மஹிந்திரா வங்கி ஆகிய வங்கிகளில் இன்னும் ஒரு சில நாட்களில் டிஜிட்டல் கரன்ஸி அனுமதிக்கப்படும் என்றும் இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

டிஜிட்டல் கரன்ஸிக்கும் கிரிப்டோகரன்சிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும் தனிநபர் இடையிலும் வணிகர்கள் இடையிலும் இந்த டிஜிட்டல் கரன்ஸியை பரிவர்த்தனை செய்து கொள்ளலாம் என்றும் இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக இந்தியா உட்பட சர்வதேச அளவில் கிரிப்டோகரன்சி புழக்கம் அதிகரித்து வருகிறது. ரிசர்வ் வங்கி பல்வேறு மோசடிகளை தவிர்ப்பதற்காக இந்த டிஜிட்டல் கரன்ஸியை வெளியிட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள் அச்சமின்றி இந்த டிஜிட்டல் கரன்ஸியை பயன்படுத்தலாம் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. டிஜிட்டல் கரன்ஸி அமலுக்கு வருவதால் காகித கரன்ஸி அச்சடிக்கும் செலவு மிச்சமாகும் என்றும் இந்த டிஜிட்டல் கரன்ஸியை செல்போன் செயலி மூலமாகவும் பயன்படுத்த முடியும் என்றும் ஆன்லைன், ஆஃப்லைன் ஆகிய இரண்டிலும் பரிவர்த்தனை செய்து கொள்ள முடியும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இன்று முதல் வெளியாகும் டிஜிட்டல் கரன்ஸியை மக்கள் எவ்வாறு வரவேற்க போகிறார்கள்? இதன் சாதகம் மற்றும் பாதகங்கள் என்ன என்பதை வரும் நாட்களில் பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம்.

author avatar
seithichurul
தினபலன்9 மணி நேரங்கள் ago

இன்றைய (27/09/2024) ராசிபலன்

ஆரோக்கியம்20 மணி நேரங்கள் ago

சாதம் சாப்பிட்டாலும் உடல் எடையை குறைக்கலாம்!

ஆரோக்கியம்20 மணி நேரங்கள் ago

செவ்வாழை: தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுவதன் நன்மைகள்!

ஆன்மீகம்20 மணி நேரங்கள் ago

நவராத்திரி 2024: தேதிகள், சிறப்புகள் மற்றும் விவரங்கள்!

ஆரோக்கியம்20 மணி நேரங்கள் ago

காடை வாங்கினா இப்படி ஒருமுறை வறுவல் செஞ்சு பாருங்க… சுவையாக இருக்கும்!

வணிகம்21 மணி நேரங்கள் ago

ஜியோவின் தீபாவளி தமாகா: ஒரு வருட இலவச இணையம், ஆனாலும் ஒரு நிபந்தனை!

ஆரோக்கியம்21 மணி நேரங்கள் ago

வெண்டைக்காய் நல்லது, ஆனாலும் இவர்கள் மட்டும் சாப்பிடக்கூடாது!

ஆரோக்கியம்21 மணி நேரங்கள் ago

முள்ளங்கியுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள் – எச்சரிக்கையுடன் இருங்கள்!

செய்திகள்21 மணி நேரங்கள் ago

தேசிய குடும்ப தினம்: குடும்ப உறவுகளை கொண்டாடும் சிறப்புநாள்!

வேலைவாய்ப்பு23 மணி நேரங்கள் ago

ரூ.34,000/- ஊதியத்தில் தமிழக அரசில் தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கான வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.15 லட்சம் சம்பளத்தில் டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு!

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்5 நாட்கள் ago

செப்டம்பர் 23 முதல் செப்டம்பர் 29 வரையிலான வார ராசிபலன்!

சினிமா5 நாட்கள் ago

OTT-யில் அதிரவைக்கும் சைக்கோ திரில்லர்: உண்மை சம்பவத்தை தழுவி வந்த Sector 36!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

ஒரு வயது வரை குழந்தைகளுக்கு இந்த உணவுகள் வேண்டாம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

IT துறையில் வேலை தேடுபவரா நீங்கள்? Accenture நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

படிகாரம்: ஆரோக்கியத்திற்கும் அற்புதமாய் பயன்படும்!

இந்தியா2 நாட்கள் ago

ரூ. 10,000 முதலீடு செய்தால் ரூ. 31 லட்சம் கிடைக்கும்…! அசத்தலான POST OFFICE திட்டம்!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (22-09-2024)

வணிகம்2 நாட்கள் ago

ஏர்டெல்-ன் மூன்று புதிய பிரீபெய்ட் திட்டங்கள் அறிமுகம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் HPCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!