இந்தியா
அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதிக்கு முன் 75 வந்தே பாரத் ரயில்கள்.. இந்தியன் ரயில்வே அறிவிப்பு!
இந்தியன் ரயில்வே நிர்வாகம் 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் 75 வந்தே பாரத் ரயில்களை இயக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் 6வது வந்தே பாரத் ரயில் சென்ற வாரம் இயக்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் மழை உள்ளிட்ட காரணங்களால் அது தள்ளிப்போனது.
செப்டம்பர் மாதம் முதல் குறைந்தது மாதத்திற்கு ஒரு வந்தே பாரத் ரயில் என ரயில்வே அறிமுகம் செய்து வருகிறது. வரும் மாதங்களில் ஒவ்வொரு மாதமும் 7 முதல் 8 வந்தே பாரத் ரயில்களை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் 6வது வந்தே பாரத் ரயில் டிசம்பர் முதல் வாரத்தில் அறிமுகம் செய்யப்படும். ரயில் உற்பத்தியை அதிகப்படுத்தச் சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலையில் கூடுதலாக 25ஒ பணியாளர்களை பணிக்கு எடுத்துள்ளனர்.
டிசம்பர் மாதம் மட்டும் 7 வந்தே பாரத் ரயில்களைத் தயாரித்து இந்தியன் ரயில்வேக்கு வழங்க ஐசிஎஃப் உறுதி அளித்துள்ளது.
வந்தே பாரத் ரயிலின் பெரும்பாலான பாகங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படும் நிலையில், அதற்கான சக்கரங்கள் உக்ரைன், சீனா, ஐரோப்பிய உள்ளிட்ட நாடுகளிலிருந்து இறக்கமது செய்யப்பட்டு வந்தது.
இப்போது டாடா உள்ளிட்ட நிறுவனங்கள் வந்தே பாரத் ரயிலின் சக்கரங்கள், இருக்கைகளைத் தயாரித்து வழங்க முன்வந்துள்ளன.