இந்தியா
மக்களவை தேர்தல் கருத்துக்கணிப்பு: திமுக 39, அதிமுக 0
மக்களவை தேர்தல் நெருங்கி வருவதால் நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் தங்களை ஆயத்தம் செய்து வருகிறது. கூட்டணி பேச்சுவார்த்தைகள், தொகுதி பங்கீடு என தேர்தக் வியூகங்களை வகுத்து வருகிறது பெரும்பாலான அரசியல் கட்சிகள். இந்நிலையில் எபிபி செய்தி நிறுவனமும், சி வோட்டர்ஸ் அமைப்பும் இணைந்து தேர்தல் குறித்த கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளது.
இந்த கருத்துக்கணிப்பின்படி இந்தமுறை எந்த ஒரு கட்சியும் தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்க முடியாது. இதில் அதிகபட்சமாக பாஜக 233 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 167 இடங்களிலும், மற்ற கட்சிகள் 143 இடங்களிலும் வெற்றி பெரும் என கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்தை பொருத்தவரை மொத்தமுள்ள 39 தொகுதிகளிலும் திமுகவே வெற்றிபெரும் என கணிக்கப்பட்டுள்ளது. அதிமுக மற்றும் பாஜக தமிழகத்தில் ஒரு இடங்களில் கூட வெற்றி பெற முடியாது என இந்த கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.