வணிகம்
டிஜிட்டல் ரூபாய் என்றால் என்ன? கள்ள ரூபாய் நோட்டுகளை ஒழிக்குமா?
இந்திய ரிசர்வ் வங்கி நவம்பர் 1-ம் தேதி முதல் மொத்த பரிவர்த்தனைகளுக்கு டிஜிட்டல் ரூபாய் சேவையை சோதனை ஓட்டமாக அறிமுகம் செய்துள்ளது.
பாரத ஸ்டேட் வங்கி, பாங்க் ஆப் பரோடா, யூனியன் பாங்க் ஆப் இந்தியா, ஐசிஐசிஐ வங்கி, ஹெச்.டி.எப்.சி வங்கி, யெஸ் வங்கி, கோடாக் மஹிந்தரா வங்கி, ஐடிஎப்சி வங்கி மற்றும் ஹெச்.எஸ்.பி.சி வங்கி நிறுவனங்கள் இந்த டிஜிட்டல் ரூபாய் சேவயை வழங்க முன்வந்துள்ளன.
டிஜிட்டல் ரூபாய் நாம் தினசரி பயன்படுத்தும் ரொக்கப் பணம் போன்றதுதான். இன்னும் மேலும் எளிமையாக கூற வெண்டும் என்றால் நாம் இப்போது பயன்படுத்தி வரும் யுபிஐ போன்ற இன்னொரு சேவை. ஆனால் இது ரொக்கப் பணத்துக்கு இணையானது.
டிஜிட்டல் ரூபாய் முதற்கட்டமாக மொத்த பரிவர்த்தனைக்கு மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. விரைவில் சில்லறை பணம் பரிவர்த்தனைக்கும் பய்ன்பாட்டுக்கு வரும் என ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
டிஜிட்டல் ரூபாய் பரிவத்தனை முழுமையாக பயன்பாட்டுக்கு வரும் போது கள்ளப் பணம் குறையும் என கூறப்படுகிறது.1 டிஜிட்டல் ரூபாய் 1 ரூபாய் நாணயத்துக்குச் சமமானது. டிஜிட்டல் – ரொக்கப்பணம் இரண்டுக்கு எந்த ஒரு வித்தியாசமும் கிடையாது.