சினிமா செய்திகள்
ராஜமெளலி படத்தில் நடிக்கிறாரா சமுத்திரகனி?
சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் சமுத்திரகனி. இயக்குநராகவும், ஹீரோவாகவும், குணசித்திர நடிகராகவும், தமிழ் சினிமாவில் கலக்கி வருகிறார்.
அட்வைஸ் படம் என்றாலோ அறிவுரை சொல்லும் காட்சி என்றாலோ சமுத்திரகனியை புக் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர் தமிழ் இயக்குநர்கள்.
கடந்த ஆண்டு வெளியான காலா, வடசென்னை படங்களில் தரமான நடிப்பால், தமிழ் சினிமாவையும் தாண்டி அறியப்பட்டு வருகிறார்.
இந்நிலையில், ராம்சரன், ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் ராஜமெளலி இயக்கத்தில் உருவாகும் பிரம்மாண்டமான படத்தில் சமுத்திரகனி முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாகுபலி படத்தை தொடர்ந்து ராஜமெளலி பிரம்மாண்டமாக இயக்கி வரும் இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் திரையிடப்படவுள்ளது.
மேலும், சமுத்திரகனி, சசிகுமார், அஞ்சலி நடிப்பில் உருவாகி வரும் நாடோடிகள் 2 படமும் விரைவில் ரிலீசாக காத்துக் கொண்டிருக்கிறது.