சினிமா செய்திகள்
வீட்டில் வேலை செய்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை… நடிகை பானுப்ரியா மீது போலீசில் புகார்
நடிகை பானுப்ரியா வீட்டில், வேலை செய்யும் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக போலீசில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
மாதம் பத்தாயிரம் ரூபாய்க்கு பானுப்ரியா வீட்டில் வேலை செய்து வந்த சிறுமிக்கும், பானுப்ரியாவின் அண்ணன் கோபாலகிருஷ்ணன் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும், கடந்த ஓராண்டாக சம்பளமும் தரவில்லை என்றும் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் போலீசில் புகார் அளித்தார்.
மேலும், இது பற்றி தான் கேட்க சென்றபோது, எங்களிடம் பணம் உள்ளது. உன்னையும் உன் குடும்பத்தையும் உண்டு இல்லாமல் பண்ணிவிடுவோம் என பானுப்ரியா மிரட்டியதாகவும் அந்த பெண் புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்த புகாரை பதிவு செய்துள்ள போலீசார் பானுப்ரியா மற்றும் அவரது அண்ணன் கோபாலகிருஷ்ணாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.