கிரிக்கெட்
சூர்யகுமார் யாதவ்வின் சதம் வீண்: 17 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி!
நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டியில் சூர்யகுமார் யாதவ் மிக அபாரமாக சதமடித்த போதிலும் மற்ற பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி சொதப்பியதால் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். ஏற்கனவே நடைபெற்ற முதல் மற்றும் இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் நேற்று மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து 216 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்கள் மட்டுமே எடுத்தது.
சூர்யகுமார் யாதவ் 117 ரன்கள் எடுத்து மிக அபாரமாக விளையாடியபோதிலும் இந்திய பேட்ஸ்மேன்கள் 6 பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்கங்களில் அவுட்டாகியதே இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.
இதனையடுத்து இந்திய அணி 2 – 1 என்ற கணக்கில் தொடரை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது. ஆட்டநாயகனாக ரீஸ் டாப்லே மற்றும் தொடர் நாயகனாக புவனேஷ் குமார் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்த நிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.