இந்தியா
ஜனாதிபதி தேர்தல்: பெண் வேட்பாளரை களமிறக்கிய பாஜக
தற்போதைய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்களின் பதவிக்காலம் ஜூலை 24-ஆம் தேதி முடிவடைய இருக்கும் நிலையில் ஜூலை 18-ஆம் தேதி புதிய ஜனாதிபதியை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் பாஜக மற்றும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மோதுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று 17 எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்கா அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது பாஜகவும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளரை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
திரெளபதி முர்பி என்பார் பாஜக சார்பில் ஜனாதிபதி தேர்தலுக்கு போட்டியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஒரு பெண் இந்திய ஜனாதிபதியாக வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜகவை பொருத்தவரை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை வெற்றிபெற வைக்கும் அளவுக்கு எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் பலம் இருப்பதால் திரெளபதி முர்பி வெற்றி பெறுவது உறுதி என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
இருப்பினும் யஷ்வந்த் சின்ஹா வலுவான போட்டியாளர் என்பதால் தேர்தல் முடிவு பரபரப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது.