தமிழ்நாடு
திமுக அங்கீகாரத்தை ரத்து செய்ய தேர்தல் ஆணையத்திற்கு சுப்பிரமணியன் சுவாமி கடிதம்
திமுகவின் அங்கீகாரத்தை ரத்து செய்யவும் திமுகவின் உதயசூரியன் சின்னத்தை முடக்கவும் பாஜக எம்பி சுப்பிரமணியன் சாமி தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிராமண சமூகத்திற்கு எதிராக சர்ச்சை கருத்து தெரிவித்த திமுகவின் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
திமுகவின் அங்கீகரிக்கப்பட்ட பதவியில் இருக்க கூடிய ராஜீவ் காந்தி என்பவர் பிராமண சமூகத்துக்கு எதிராக சர்ச்சை கருத்து தெரிவித்ததை அடுத்து திமுகவின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என சுப்பிரமணியசாமி கூறியுள்ளார்.
மக்கள் பிரதிநிதி சட்டத்தின் அடிப்படையில் திராவிட கழகத்தின் பிரிவான திமுக தொடர்ந்து பிராமணர் சமுதாயத்துக்கு எதிராக அவதூறாக பேசி வருவதாகவும் குறிப்பாக தமிழகத்தில் உள்ள பிராமணர்களை இனப்படுகொலைக்கு ஆளாக்க வேண்டும் என்று அவர் பேசியிருப்பது அந்த சமூகத்தை மக்கள் மத்தியில் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது என்றும் இதனால் பிராமணர்களின் அடிப்படை உரிமை நேரடியாக பாதிக்கும் என்றும் அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Subramanian Swamy petitions to Election Commission for cancelling registration of DMK for its leaders calling for genocide of Tamil Brahmins https://t.co/DeAARQSIyT via @PGurus1
— Subramanian Swamy (@Swamy39) June 8, 2022