கிரிக்கெட்
14 ஆண்டுகளுக்கு பின் இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற ராஜஸ்தான்!
நேற்று நடைபெற்ற பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது பிளே ஆப் போட்டியில் ராஜஸ்தான் அணி அபாரமாக வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ள குஜராத் அணியுடன் 14 ஆண்டுகளுக்குப் பின்னர் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ள ராஜஸ்தான் அணி வரும் ஞாயிற்றுக்கிழமை மோத உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2008ஆம் ஆண்டு இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற ராஜஸ்தான் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கடைசி பந்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. அதன்பிறகு கடந்த 14 ஆண்டுகளாக அந்த அணி சாம்பியன் பட்டம் வெல்ல முடியாத நிலையில் இந்த ஆண்டு இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று சாம்பியன் பட்டத்தை வெல்லும் வாய்ப்பை பெற்றுள்ளது. இன்னும் ஒரே ஒரு போட்டியில் சிறப்பாக விளையாடினால் ராஜஸ்தான் அணிக்கு சாம்பியன் பட்டம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் முதல் முறையாக ஐபிஎல் தொடரில் அறிமுகமாகியிருக்கும் குஜராட் அணி சாம்பியன் பட்டத்தை பெற்றால் மிகப்பெரிய சாதனை செய்ததாக கருதப்படும். அறிமுகமான முதல் போட்டியிலேயே சாம்பியன் பட்டம் பெறுவது என்பது மிகப்பெரிய விஷயம் என்று விளையாட்டு விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இந்த சீசனில் ஆரம்ப முதலே குஜராத் அணி மிக அபாரமாக விளையாடி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ள குஜராத் அணி 20 புள்ளிகள் எடுத்து அசத்தியது. அதேபோல் முதல் பிளே ஆப் போட்டியில் வெற்றி பெற்றுள்ள நிலையில் சாம்பியன் பட்டத்தை வெல்லும் இறுதிப் போட்டியிலும் குஜராத் அணி வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.